Tuesday 21 October 2014

வேலை பார்க்கும் பெண்களுக்கான சட்டங்கள் என்ன?



மகப்பேறு நல சட்டம், 1961
(மெட்டர்னிட்டி பெனிஃபிட் ஆக்ட் 1961)
ஆகாய விமானம் ஓட்டுவதில் தொடங்கி,
ஆண்களைக் காலில் விழச் செய்கிற
வரை இன்று பெண்களால் எல்லாம் முடியும்.
பெண்கள் இல்லாத துறை என்பதே அரிதாகிக்
கொண்டிருக்கிற காலகட்டம் இது. ஆனாலும்,
வேலை என்று வீட்டை விட்டு வெளியே வரும்
பெண்கள், பணியிடத்துச் சூழலில்
பாதுகாப்பை உணர்கிறார்களா?
இந்திய அரசியல் அமைப்பு சாசனம்,
‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’
என்று கூறினாலும் அதன் 15(3) ஷரத்தின்
கீழ் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான
தனிச்சட்டங்கள் இயற்ற
வழிவகை செய்துள்ளது. அதன்
அடிப்படையிலேயே பல நலச் சட்டங்கள்
இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளன. நம்
நாட்டில் உழைக்கும் மகளிருக்காக இருக்கும்
சட்டங்கள் என்ன என்ன? அவை கொடுக்கும்
பாதுகாப்பு என்ன? என்பது உழைக்கும்
பெண்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
மகப்பேறு நல சட்டம், 1961
(மெட்டர்னிட்டி பெனிஃபிட் ஆக்ட் 1961)
ஒரு பெண்ணுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும்
சிரமத்தையும் ஒரே நேரத்தில் கொடுக்கும்
காலம்தான் அவளது தாய்மைப் பருவம்.
தாய்மையடைந்த நிலையில் வேலைக்குச்
செல்லும் போது அவளுக்கு சட்டம்
கொடுக்கும் பாதுகாப்பு மற்றும் சலுகைகள்
பற்றி மகப்பேறு நல சட்டம் 1961
விளக்குகிறது. தாய்மையடைந்துள்ள
ஒரு பெண் மற்றும் அவள் ஈன்றெடுக்கும்
அந்தப் புது வரவின் ஆரோக்கியத்தைப்
பாதுகாக்கவும் குழந்தைப்பேறுக்கு சில
நாள்கள் முன்பும், பின்பும்
சராசரி பணி செய்ய இயலாத தாய்க்கும்
சேய்க்கும் தேவையான விடுப்புடன் கூடிய
பொருளாதார சலுகை மற்றும் இதர சலுகைகள்
அளிப்பது என்ற நோக்கிலேயே இந்தச் சட்டம்
இயற்றப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் இந்தச் சட்டம் பொருந்தும்?
தனியார் அல்லது அரசுக்குச் சொந்தமான
தொழிற்சாலை, சுரங்கம், தேயிலைத் தோட்டம்
ஆகியவற்றில்
நேரடியாகவோ அல்லது காண்டிராக்டர்
மூலமாகவோ பணி செய்யும் பெண்கள்,
குதிரையேற்றம், சர்க்கஸ் போன்று உடலால்
செய்யும் வித்தைகள் மற்றும் அதை ஒத்த
வித்தைகள், கடை, அங்காடி போன்றவற்றில்
10க்கும் அதிக பெண்கள் - சென்ற 12
மாதங்களில் பணிபுரியும் பட்சத்திலும்,
அரசு, தொழில், வர்த்தகம், விவசாய
ரீதியான பணியில் ஈடுபடுவோருக்கும
2 மாத அறிவிப்பினைத்
தொடர்ந்து அரசாங்கப் பதிவேட்டில்
அறிவித்து இச்சட்டத்தை அவர்களுக்கும்
அமல்படுத்தச் செய்யலாம். இந்தச் சட்டத்தின்
பொருளாதார ரீதியான சலுகைகள்...
பிரசவத்துக்கு முன் 6 வார காலத்துக்கான
சம்பளத்துடன் கூடிய விடுப்பு,
பிரசவத்துக்குப் பின் 6 வார காலத்துக்கான
சம்பளத்துடன் கூடிய விடுப்பு (இந்த 12
வார
விடுப்பினை எப்படி வேண்டுமென்றாலும்
எடுத்துக் கொள்ளலாம்).
நிர்வாகத் தரப்பு இலவச மருத்துவ
பாதுகாப்பு தர இயலாத பட்சத்தில்
குறைந்தது 1,000 ரூபாய்க்கான மருத்துவ
போனஸ். பேறுகாலம், பிரசவம்
அல்லது கருக்கலைப்பின் போது ஏற்படும்
உடல்நலக் குறைவுக்கான சான்றாவணம்
சமர்ப்பிக்கும் பொருட்டு மேலும்
ஒரு மாதத்துக்கான சம்பளத்துடன் கூடிய
விடுப்பு.
கருக்கலைப்பு ஏற்படின் 6 வாரம்
சம்பளத்துடன் கூடிய விடுப்பு. குடும்பக்
கட்டுபாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தால்
2 வாரம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு.
பிரசவத்துக்கு 6 வாரம் முன்பும் அதற்கு முன்
ஒரு மாதமும் ஆக மொத்தம் 10 வாரங்கள்
வரை எளிமையான பணி கோர கருவுற்ற
பெண்ணுக்கு உரிமை உண்டு. அந்த
உரிமை கோரும் நேரத்தில்
கருவுற்றதற்கு ஆதாரமாக மருத்துவச்
சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
பிரசவத்துக்குப் பின் பணியில் சேர்ந்த
பிறகு எப்போதும் கிடைக்கும் பிரேக்
பீரியட் உடன் மேலும் 2 முறை 15 நிமிட
கால அவகாசம் கொண்ட
(குழந்தைக்கு பாலூட்டுவதற்கு)
இடைவெளி கொடுப்பது அவசியம்.
பேறுகாலத்தின் போது பெண்ணின்
பணிமுறையை உடல்நிலைக்கு குந்தகம்
ஏற்படும்படி மாற்றம் செய்யக்கூடாது.
பேறுகாலத்தில் ஒரு பெண்ணை பணி நீக்கம்
செய்யக்கூடாது. அவ்வாறு பணி நீக்கம்
செய்யும் பட்சத்தில் பேறுகால சலுகையைப்
பெற அவர்களுக்கு உரிமை உண்டு.
(ஒருவேளை தண்டனைக்குரிய
குற்றச்செயலுக்காக
வேலையிலிருந்து நீக்கும் பட்சத்தில்
இச்சட்டத்தின் கீழ் சலுகை மறுக்கப்படலாம்).
தாய்மையைப் போற்ற குறிப்பிடும்படியான
ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்
India Vs Nargalesh Meerza
என்ற வழக்கின்
தீர்ப்புக்கு முன் வரை இந்திய விமானப்
பணிப்பெண்ணாக பணிபுரிய அதிகபட்ச
வயது 35 ஆகவும் அல்லது பணியில்
சேர்ந்து 4 வருடங்களுக்குள் திருமணம்
நடைபெறுவது அல்லது முதன் முறையாக
தாய்மை அடைவது இதில் எது முன்னர்
நடைபெறுகிறதோ அதன்படி அப்பெண்கள்
பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுக்
கொண்டிருந் தார்கள். குழந்தை பெற்ற
பிறகு தொடர்ந்து பணி செய்வதோ, அந்தப்
பணியிலிருக்கும் போது குழந்தையைப்
பராமரிப்பதோ அந்தப் பெண்ணின் தனிப்பட்ட
பிரச்னை, அது எந்த விதத்திலும்
நிர்வாகத்தைப் பாதிக்காது என்று இந்த
வழக்கின் தீர்ப்பு வலியுறுத்தி,
தாய்மை அடையும் பணிபுரியும்
பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.
* ஒரு பெண் இச்சட்டத்தின் கீழ் சலுகைகள்
பெற பிரசவத்துக்கு 12 மாதம்
முன்பு குறைந்தபட்சம் 80 நாள்களேனும்
பணி செய்திருக்க வேண்டும். அது
வருகைப்பதிவேட்டில் பதிவாகியிருக்க
வேண்டும்.
‘அசோசியேட் பேங்க் ஆபீசர்ஸ்
அசோசியேஷன் வெர்சஸ் ஸ்டேட் பேங்க் ஆஃப்
இந்தியா’
புகழ் பெற்ற இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம்
உச்ச நீதிமன்றம் சமமான வேலைக்கு சமமான
கூலி என்ற கோட்பாட்டை மீண்டும்
ஒரு முறை நிலைநிறுத்தி உழைக்கும்
மகளிருக்கு எதிரான ஊதிய
குறைபாட்டை நிவர்த்தி செய்ய
வழிவகை செய்தது. இந்தச்
சட்டத்தின்படி ஒரு நிர்வாகத் தரப்பு தகுந்த
பதிவேடுகளை பாராமரிக்காத பட்சத்திலும்,
மேலும் அது சம்பந்தப்பட்ட
தஸ்தாவேஜு களை சமர்ப்பிக்காத பட்சத்திலும்
இந்தச் சட்டத்துக்குப் புறம்பாக ஆண், பெண்
ஊழியர்களை சமமாக நடத்தாமலும், சமமாக
கூலி கொடுக்காமல் இருக்கும் பட்சத்திலும்
சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க
வாய்ப்புள்ளது.
இது டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய
தீர்ப்பு.

No comments:

Post a Comment