Wednesday 22 June 2016

பொட்டாசியம் புரோமேட்டை உணவு பொருட்களில் சேர்க்கக் கூடாது

நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர்'s photo.

ரொட்டி மற்றும் பன்களில் 84 சதவீத அளவிற்கு பல நாடுகளில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ரசாயன பொருட்கள் என்று பட்டியலிடப்பட்ட பொட்டாசியம் புரோமேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட் போன்றவை இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பொட்டாசியம் புரோமேட்டை உணவு பொருட்களில் சேர்க்கக் கூடாது என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் பரிந்துரை செய்து உள்ளது
இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் விரும்பி உண்ணும் உணவுப்பொருளில் பிரட், பிசா, பர்கர் போன்றவையும் இடம் பெறுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இத்தகையை உணவுப்பொருட்களில் உடலுக்கு கேடு விளைவிக்கும் நச்சு ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக தற்போது அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இந்த உணவுப்பொருட்களில் எடுக்கப்பட்ட அடுத்தடுத்த பரிசோதனைகளில் நச்சு ரசாயனம் இருப்பது தெரியவந்துள்ளது எனவும், இந்த நச்சு ரசாயனத்தை உட்கொள்வதால், தைராய்டு, புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவியல் சுற்றுச்சூழல் மைய ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இயங்கி வரும் ஐந்து பன்னாட்டு உணவகங்களான கேஎஃப்சி, டோமினோஸ், பிட்சா ஹட், சப்வே, மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவன உணவகங்களில் பயன்படுத்தப்படும் பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக அறிவியல், சுற்றுச்சூழல் மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.இது தவிர பிரிட்டானியா, ஹார்வெஸ்ட் கோல்ட் நிறுவன பிரட்களிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கேஎஃப்சி உள்ளிட்ட உணவங்களில் இருந்தும், கடைகளில் விற்பனை செய்யப்படும் பிரட்களில் இருந்தும் மொத்தம் 38 மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் 84 சதவீத பிரட்களில் பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகிய வேதிப்பொருள்கள் கலந்துள்ளன. இவை இலங்கை,சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.
ஆனால், இந்தியாவில் இந்த வேதிப்பொருள்கள் கலந்த பிரட்கள் தாராளமாக கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை சாப்பிடுபவர்களுக்கு தைராய்டு பிரச்னை முதல் புற்றுநோய் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாண்ட்விச் பிரட், வொயிட் பிரட், பாவ், பன் ஆகியவற்றில் அதிக அளவில் கேடு விளைவிக்கும் வேதிப்பொருள் உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சிகர தகவல் வெளியானதை அடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.எனினும், அகில இந்திய பிரட் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உரிய பாதுகாப்பு தரத்துடன் தான் இந்தியாவில் பிரட்கள் தயாரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
பிரபல நிறுவனங்களின் ரொட்டிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயன பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய சுகாதார மந்திரி உத்தரவிட்டார்.
ரொட்டிகள் ஆய்வு
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பிரபல ரொட்டி நிறுவனங்களின் தயாரிப்பு தரம் குறித்து அண்மையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வு மேற்கொண்டது.
இதற்காக டெல்லியில் விற்பனை செய்யப்பட்ட பிரிட்டானியா, ஹார்வெஸ்ட் கோல்ட், கே.எப்.சி., பீசா ஹட், டொமினோஸ், சப்வே, மெக்டொனால்டு, சிலைஸ் ஆப் இத்தாலி உள்ளிட்ட 38 நிறுவனங்களின் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ரொட்டி, ‘பன்’ போன்றவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, இந்த நிறுவனங்களின் ரொட்டி மற்றும் பன்களில் 84 சதவீத அளவிற்கு பல நாடுகளில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ரசாயன பொருட்கள் என்று பட்டியலிடப்பட்ட பொட்டாசியம் புரோமேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட் போன்றவை இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ரசாயன பொருட்கள்
இந்த ஆய்வை மேற்கொண்ட அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தினர் கூறியதாவது:-
பிரபல நிறுவனங்களின் ரொட்டி மற்றும் பன் ஆகியவற்றில் மனிதர்களுக்கு புற்றுநோய் உருவாக காரணமாக கருதப்படும் 2பி கார்சினோஜென் ரசாயனப் பொருள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
இவற்றில் காணப்பட்ட இன்னொரு ரசாயனப் பொருள் தைராய்டு குறைபாடுகளை ஏற்படுத்துவது ஆகும். ஆனால் இவற்றின் பயன்பாடு இந்தியாவில் தடை செய்யவில்லை. எனவே பொட்டாசியம் புரோமேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட் ஆகியவற்றை ரொட்டிகளில் சேர்க்க தடை விதிக்கவேண்டும் என மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் பரிந்துரை செய்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நிறுவனங்கள் மறுப்பு
எனினும், தங்களுடைய ரொட்டி தயாரிப்புகள் எவற்றிலும், இந்த வகை ரசாயனப் பொருட்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று பிரிட்டானியா, கே.எப்.சி., டொமினோஸ், மெக்டொனால்டு, சப்வே ஆகியவை மறுத்தன. மற்ற நிறுவனங்கள் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
பிரபல நிறுவனங்களின் ரொட்டி தயாரிப்புகளில் புற்று நோயை உருவாக்கும் ரசாயன பொருட்கள் இருப்பதாக வெளி யாகி உள்ள தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
விசாரணைக்கு உத்தரவு
இதுபற்றி மத்திய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா கூறுகையில், ‘‘இந்த விஷயத்தை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டோம். இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு எனது இலாகா அதிகாரிகளை கேட்டுக் கொண்டு இருக்கிறேன். இதுபற்றி பீதி கொள்ளத் தேவையில்லை. விரைவில் விசாரணை அறிக்கை வந்துவிடும்’’ என்று குறிப்பிட்டார்.
மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வு முடிவு குறித்து மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி பவன் குமார் அகர்வால் உடனடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
விரைவில் அறிவிப்பு
அதில், ‘‘பொட்டாசியம் புரோமேட்டை உணவு பொருட்களில் சேர்க்கக் கூடாது என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் பரிந்துரை செய்து உள்ளது. ஏற்கனவே இதை சேர்க்கை பட்டியலில் இருந்து அகற்றிவிட முடிவு செய்து இருக்கிறோம். இதுபற்றிய அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும். பொட்டாசியம் அயோடேட் பற்றி ஆய்வு நடத்தி வருகிறோம். இதுகுறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Wednesday 11 May 2016

Whats up பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 அம்சங்கள்


மொபைல் போனில் இன்டர்நெட் இருந்தாலே வாட்ஸ் அப்பை நீங்க உபயோகிக்க முடியும். வாட்ஸ் அப் இல்லாமல் இன்று யாருமே இருக்க மாட்டார்கள் என்பதால் வாட்ஸ் அப் பற்றி நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம், கீழ் இருக்கும் ஸ்லைடர்களில் பட்டியலை பார்க்கவும்.
             
                                 
1.ப்ரொபைல் போட்டோ
உங்க நண்பரின் ப்ரொபைல் போட்டோவை வாட்ஸ் அப்பில் மாற்ற முடியும், ஆனால் அது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதற்கு உங்களுக்கு பிடித்த போட்டோவை 561*561 அளவில் எடுத்து அதில் உங்க நண்பர் எண்ணை பதிவு செய்து மெமரி கார்டு- வாட்ஸ் அப்-ப்ரொபைல் போட்டோ சென்று ஏற்கனவே இருக்கும் போட்டோவை ரீ ப்ளேஸ் செய்தால் வேலை முடிந்தது.
2.கடைசியாக பார்த்தது
உங்க வாட்ஸ் அப்பில் கடைசியாக பார்த்ததை மறைக்க நாட் லாஸ்ட் ஸீன் என்ற அப்ளிக்ஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
3.RAR, .APK, .ZIP பைல்களை பறிமாறுவது
போட்டோ மற்றும் பைல்களை பறிமாறுவது அளவு படுத்தப்பட்ட நிலையில் நீங்கள் க்ளவுட்சென்ட் மற்றும் ட்ராப் பாக்ஸ்களை பதிவிறக்கம் செய்து, க்ளவுட்சென்ட் மூலம் ட்ராப் பாக்ஸை இனைத்து தேவையான பைல்களை லிங்க் செய்து அனுப்பலாம்
4.வாட்ஸ் அப் அக்கவுன்ட்
ஆன்டிராய்டில் டூயல் சிம் பயன்படுத்துபவர்கள் இரு வாட்ஸ் அப் அக்கவுன்டகளை ஆரம்பிக்க நீங்க ஸ்விட்ச்மீ என்ற அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
5.தவறுதலாக டெலீட் செய்த மெசேஜ்களை மீட்க
 உங்க எஸ்டி கார்டுக்கு சென்று வாட்ஸ் அப் - டேட்டாபேஸ் சென்றால் நீங்க டெலீட் செய்த அனைத்து மெசேஜ்களும் இங்கு இருக்கும்
6.வாட்ஸ் அப் ஆட்டோ இமேஜ் டவுன்லோடு
வாட்ஸ் அப்பில் வரும் போட்டோக்கள் தானாக டவுன்லோடு ஆவதை கட்டுப்படுத்த செட்டிங்ஸ் - சாட் செட்டிங்ஸ் - மீடியா ஆட்டோ டவுன்லோடு சென்று உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம்
7.மொபைல் நம்பர்
உங்க மொபைல் நம்பர் என்டர் செய்யாமல் வாட்ஸ் அப் பயன்படுத்த ஏற்கனவே இருக்கும் வாட்ஸ் அப்பை டெலீட் செய்து மீண்டும் டவுன்லோடு செய்யுங்கள். ப்ளைட் மோடை ஆக்டிவேட் செய்து உங்க நம்பரை பதிவு செய்யுங்க. இப்ப உங்க நம்பர் ரிஜெஸ்டர் ஆகாது, அடதனால் வேறு முறைகளை பயன்படுத்தி வெரிஃபை செய்ய சொல்லும் நீங்க அதையும் கேன்சல் செய்து விடுங்கள். இப்போ ஸ்பூஃப் டெக்ஸ்ட் மெசேஜை இன்ஸ்டால் செய்து அவுட்பாக்ஸ் சென்று மெசேஜ் தகவல்களை ஸ்பூஃப் அப்ளிகேஷனுக்கு காப்பி செய்து ஸ்பூஃப்டு வெரிபிகேஷனுக்கு அனுப்புங்கள். ஸ்பூஃப்டு மெசேஜில் +4479000347295, நாட்டின் குறியீடு, மொபைல் நம்பர் மற்றும் ஈ மெயில் அட்ரெஸை குறிப்பிட்டால் வேலை முடிந்தது.
8.ஹைடிங் ப்ரொபைல் போட்டோ
உங்க வாட்ஸ் அப் ப்ரோபைல் போட்டோவை மறைக்க வாட்ஸ் அப் ப்ளஸ் தான் சிறந்தது
9.வாய்ஸ் நோட்டிபிக்கேஷன்
வாட்ஸ் அப் நோட்டிப்பிக்கேஷன்களை படிக்க நேரமில்லை என்றால் வாய்ஸ் பார் மோட்டிபிக்கேஷன் மற்றும் டெக்ஸ்ட் டூ ஸ்பீச் மென்பொருளை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதற்கு செட்டிங்ஸ் - அசெஸ்சபிலிட்டி சென்று வாய்ஸ் நோட்டிபிக்கேஷனை ஆன் செய்ய வேண்டும்
10.வாட்ஸ் அப் ஸ்டாட்ஸ்
வாட்ஸ் ஸட்டாட் பார் வாட்ஸ் அப் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் வாட்ஸ் அப் டவுன்லோடு செய்ததில் இருந்து எத்தனை மெசேஜ்களை அனுப்பியுள்ளீர்கள் என்பதை பார்க்க முடியும். 

Friday 4 March 2016

தெரியாத எண்களில் இருந்து கால் வருகின்றதா ?

தெரியாத எண்களில் இருந்து கால் வருகின்றதா ? அது யாருடைய எண் அவரின் பெயர் என்ன ஆணா பெண்ணா எந்த ஊர் என்பதை எளிதில் அறிய எளிய வழி!
முற்றிலும் இலவசம் - அனைத்து நாட்டு எண்களுக்கும் வேலை செய்யும்.
லேன்ட் லைன் மற்றுமு் மொபைல் எதுவாக இருந்தாலும் அதை பயன்படுத்துபவரின் பெயர் மற்றும் இடத்தை ஒரு நொடியில் தெரிந்து கொள்ளலாம்.
இதன் மென்பொருளை நீங்கள் உங்கள் போனில் இன்ஸ்டால் செய்து கொண்டால் யாராவது போன் செய்யும் போது உங்க போன் புக்கில் அந்த நம்பர் இல்லை என்றாலும் அது யாருடைய நம்பர் என பெயரை காண்பிக்கும்.
ஆச்சரிப்படுவீர்கள் இப்பொழுதே முயற்சித்து பாருங்கள்!

http://sh.st/t5zQG
http://sh.st/t5zpr
http://sh.st/t5zWO
http://sh.st/t5zEx
http://sh.st/t5zRr

Thursday 29 January 2015

நிலம் வாங்க இதோ ஒரு செக் லிஸ்ட் :


1. குறைந்தது முப்பது வருடங்கள் வில்லங்க Certificate பார்க்க வேண்டும். இந்த முப்பது வருடங்களில் சொத்து யாரிடமிருந்து யாருக்கு மாறியது; மாறிய போது சரியான வாரிசு தாரர்களுக்கோ, உயில் எழுதிய நபருக்கோ சென்றதா போன்ற விபரங்கள் ஆய்ந்து அறியப்பட வேண்டும்.
2. வில்லங்க பத்திரம் மட்டுமல்லாது மூல பத்திரங்களின் ஒரிஜினல் சரி பார்ப்பதன் மூலமே மேலே சொன்ன "சொத்து சரியாக கை மாறியதா " என்பதை முழுதாக அறிய முடியும்.
3. கட்டப்பட்ட வீடு எனில், அந்த பில்டிங் கட்டுவதற்கான அங்கீகாரம் பெறப்பட்டதா.. கட்டிடம் இல்லாத காலி மனை (ப்ளாட்) எனில், அங்கு மனை போட CMDA அல்லது DTCP அங்கீகாரம் உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இந்த அங்கீகாரம் இருந்தால் தான் அதை " அப்ரூவ்டு மனை" என சொல்ல முடியும். அப்போது தான் அந்த மனை வாங்க வங்கிகள் கடன் தரும். (அங்கீகாரம் பெறாத மனைக்கு சிட்டிபேன்க் போன்ற சில வங்கிகள் கடன் தருகின்றன. ஆயினும் அந்த கடன்கள் தனி நபரின் மதிப்பை வைத்து தான் தரப்படுகின்றன. அவர்கள் சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளனர். பணம் தராமல் ஏமாற்ற மாட்டார் என்கிற எண்ணத்தில் தான் வங்கிகள் தருகின்றன. அதே நிலத்துக்கு சாதாரண ஆள் கடன் கேட்டால், அதே வங்கி தராது போகலாம் !)
4. நீங்கள் வாங்க எண்ணும் இடத்துக்கான நில வரி அல்லது வீட்டு வரி கடந்த வருடங்களில் கட்டப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இதனை பார்ப்பதற்கு இரு காரணங்கள். ஒன்று யார் பெயரில் வீட்டு வரி கட்ட பட்டுள்ளதோ அவர் தான் வீட்டு ஓனர் என்பது அதன் மூலம் தெரிய வரும். அடுத்தது கடந்த சில வருடங்களில் அவர் வரி கட்டா விடில், சொத்து உங்கள் கைக்கு வந்த பின் அந்த வரிகளை நீங்கள் கட்ட நேரிடலாம். முக்கியமாய் சொத்தின் ஒனர்ஷிப்பை உறுதி செய்ய இந்த வரி ரசீதுகள் அவசியம். சிட்டா, அடங்கல் போன்றவையும் கூட வரி ரசீதுகள் தான். அவையும் சரி பார்த்தல் அவசியம்.
5. சொத்தை விற்க பொது அதிகாரம் தரப்பட்டிருந்தால், அந்த பத்திரமும் அது தான் இறுதியான பத்திரமா என்றும் சரி பார்க்க பட வேண்டும். (பொது அதிகார பத்திரம் பற்றி தனியே விரிவாய் பார்க்கலாம்)
6. சற்றே பெரிய காலி இடம் எனில் அந்த இடத்தில் பார்க் உள்ளிட்ட இடங்களுக்கு இடம் விடப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். மேலும் பார்க்குக்கு ஒதுக்கிய இடத்தை உங்களுக்கு விற்க முயல்கின்றனரா என்றும் சரி பார்த்தல் அவசியம்.
7. இடத்துக்கான கைடு லைன் வேல்யூ என்ன என்பதை பார்த்து அதன் அடிப்படையில் ( சொத்து விலையில் 8% ) ஸ்டாம்ப் பேப்பர் வாங்க வேண்டும். இப்படி ஸ்டாம்ப் பேப்பர் வாங்குவது அரசுக்கான வருமானம்.
8. சொத்தை இன்னும் சில மாதங்கள் கழித்து தான் உங்கள் பெயரில் ரிஜிஸ்தர் செய்ய போகிறீர்கள், தற்போது அட்வான்ஸ் தான் தருகிறீர்கள் என்றால், எத்தனை நாளுக்குள் ரிஜிஸ்தர் செய்ய வேண்டும், பணம் எப்போது தரப்படும், முதலில் தரும் அட்வான்ஸ் எவ்வளவு என்பவை குறிப்பிட்டு ஒரு அக்ரிமென்ட் போட்டு கொள்தல் நல்லது. மிக எச்சரிக்கையான சிலர் இந்த அக்ரிமென்ட்டையும் பத்திர அலுவலகத்தில் ரிஜிஸ்தர் செய்து விடுவார்கள்.. அப்போது தான் அதற்கு ஒரு பைண்டிங் போர்ஸ் வரும் என்பதால்
9. நிலத்துக்கான பட்டா வாங்கப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். பட்டாவும் நிலத்தின் உரிமையை நிர்ணயிக்கும் தாக்கீது தான்.
10. இவை அனைத்தும் சரி பார்ப்பதன் முக்கிய நோக்கம் நிலத்தின் உரிமையாளர் யார் என்று பார்த்து அவர் தான் உங்களுக்கு விற்கிறாரா, அதை விற்க அவருக்கு உரிமை உள்ளதா என நிர்ணயிக்க தான்.உரிமையாளர் தான் உங்களுக்கு விற்கிறாரா என அனைத்து விதத்திலும் உறுதி செய்த பின் தான் அந்த இடம் வாங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்
இதுவரை படித்ததில் ஒரு விஷயம் உங்களுக்கு புரிந்திருக்கும். இது மிக டெக்னிகல் ஆன விஷயம். இத்தனை விஷயங்களை சாதாரண மக்களால் படித்து புரிந்து கொள்ள முடியாது. சொத்து விஷயங்களை டீல் செய்யும் வழக்கறிஞராக பார்த்து அவரிடம் இந்த விஷயங்களை சரி பார்த்த பிறகே நிலம் வாங்க முடிவெடுப்பதே நல்லது.
பல லட்சங்கள் செலவு செய்து ஒரு சொத்து வாங்கும் போது சில ஆயிரம் வழக்கறிஞருக்கு செலவு செய்து அதில் வில்லங்கம் இருக்கிறதா என பார்த்து விடுவது நிம்மதியாக இருக்க உதவும் !

Tuesday 27 January 2015

So what do the samsung firmware codes mean?


Here is a simple explanation:

C3312_XXMK1

C3312 = Model
XX = Region
M= Year
K= Month
1 = Revision

Region Codes:

BD Cyprus, Greece
CP Finland
DB Vietnam
DC Thailand
DD India
DT Australia
DX Indonesia, Malaysia, Philippines, Singapore, Vietnam
DZ Malaysia, Singapore
JA South Africa
JC Algeria, Morocco, Nigeria, South Africa, Tunisia
JP Arabic
JR Arabic
JV Algeria, Egypt, Iran, Iraq, Kuwait, Morocco, Nigeria, Oman, Pakistan, Saudi Arabia, South Africa, Syria, Tunisia, Turkey
MT Switzerland
XA Austria, France, Germany, Italy, Netherlands, Switzerland, United Kingdom
XB Denmark, Norway, Sweden
XC Portugal, Spain
XD Croatia, Czech, Hungary, Slovakia
XE Bulgaria, Estonia, Kazakhstan, Latvia, Lithuania, Russia, Ukraine
XF Bulgaria, Croatia, Romania
XP Uk, Poland, Germany, Netherlands, Sweden, Italy, Spain, Portugal, Turkish
XX Austria, Belgium, France, Germany, Hungary, Italy, Spain, United Kingdom
ZC China, Hong Kong
ZH Hong Kong
ZT Taiwan

Mobile Carrier Codes:


AE SFR, France
AI Tim, Italy
AM Vodafone
AN E-Plus, Germany
AO O2
AS KPN, Netherland
AU Mobilkom, Austria
BB TMN, Portugal, Spain, UK
BF Optimus, Portugal
BG Telefonica, Spain
BM Swisscom, Switzerland
BN Amena, Spain
BO T-Mobile, Germany
BU Vodafone
BV Orange, Switzerland
BW O2, United Kingdom
CD Proximus, Belgium
CG Telia Mobitel, Sweden
CH SingTel, Singapore
CK Tele2 Comviq, Sweden
CT Tdc, Denmark
CU One, Austria
CV Telenor, Norway
DT Optus, Australia
DV Telstra, Australia
EF Celcom, Malaysia
JB Vodacom, South Africa
MD Telia Sonera, Finland
MJ Vodafone, Italy
MM Tele Ring, Austria
MV NetCom, Norway
NA Nrj, France
NB Tele2 Norway, Norway
NE H3g Nordic, Sweden
NP H3g, Italy
SS Vodafone, Japan

Year Codes:


A - 2001
B - 2002
C - 2003
D - 2004
E - 2005
F - 2006
G - 2007
H - 2008
I - 2009
J - 2010
k - 2011
L - 2012
M - 2013
N - 2014

Month Codes:

A - January
B - February
C - March
D - April
E - May
F - June
G - July
H - August
I - September
J - October
K - November
L - December

Thursday 1 January 2015

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

படித்து பாருங்கள் உங்களுக்கு மெய் சிலிர்த்துபோகும் !!
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.
நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.
அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.
அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.
இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.
இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.
அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.
இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.


இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.
நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.
அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.
அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.
இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.
இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.
அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.
இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

Thursday 18 December 2014

நீங்கள் ஏதேனும் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டால் அந்த சமயம் உங்கள் உரிமை என்ன..?

நீங்கள் ஏதேனும் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டால் அந்த சமயம் உங்கள் உரிமை என்ன..?

கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும்

6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவிபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்…

7. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

8. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

9. கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.

10. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

11. கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.


கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.
1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.
2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.
3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.
5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும்
6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவிபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்…
7. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும்.
8. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.
9. கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.
10. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.
11. கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.