Saturday 31 May 2014

Event Calendar Period: 2nd June – 13th June 2014 India

Event Calendar Period: 2nd June – 13th June 2014 India
***********************************************************************
• May HSBC India Manufacturing PMI (2 Jun)
• RBI policy meet (3 Jun)
• HSBC India Services & Composite PMI (4 Jun)
• May Export & Imports YoY (10 Jun)
• Apr IIP & CPI data YoY (12 Jun)
US
• May ISM Manufacturing (2 Jun)
• Q1 Nonfarm Productivity (4 Jun)
• May Change in Nonfarm Payrolls (6 Jun)
• May Unemployment Rate (6 Jun)
• Apr Wholesale Inventories MoM (10 Jun)
• May Import Price Index YoY (12 Jun)
• May PPI Ex Food and Energy YoY (13 Jun)
China
• May Non-manufacturing PMI (3 Jun)
• May HSBC China Services & composite PMI (5 Jun)
• May PPI & CPI YoY (10 Jun)
• May Industrial Production YoY (13 Jun)
Europe
• Apr Unemployment Rate & CPI Core YoY (3 Jun)
• ECB Publishes Monthly Report (12Jun)
• Apr Industrial Production YoY (12 Jun)
• Q1 Employment YoY (13 Jun)

ஆபாச தகவல் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

ஆபாச தகவல் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?
அதிகமாக ஷேர் செய்யவும்...!!
நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி?
1. முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
2. பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.
அல்லது
http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்.
3. Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.
4. Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.\
5. அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.
இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .
இது ஓகே தானே
நான் உங்களிடமிருந்து எதிர் பார்ப்பது ஒரு share ஐ மட்டுமே...

Friday 30 May 2014

பஞ்சாட்சரம் விளக்கம்

விளக்கம்
பஞ்சாட்சரம் = பஞ்ச + அட்சரம் = ஐந்து எழுத்து
பஞ்சாட்சரம் என்பது ஐந்து எழுத்துக்களால் ஆனது என்று பொருள். இவை "நமசிவாய" என்பதாகும்.

பயன்பாடு
பஞ்சாட்சரம் என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தைத் தூலம் (வெளிப்படையாகத் தொழுவது), சூக்கும்(புலப்படாதது-உணரக்கூடியது), அதிசூக்குமம்(ஞானிகளால் மட்டும் உணரமுடிவது) என மூவகையாக திருமூலர் திருமந்திரத்தில் விளக்குகிறார். தூல பஞ்சாட்சரம் அல்லது தூல ஐந்தெழுத்து என்பது சிவாயநம என்பதாகும். சிவாயநம என மானசீகமாகச் (மனதிற்குள்ளேயே கூறுதல்) செபித்தால் சூக்கும அசைவுகள் ஆகாயத்தில் பொருந்தி மூலாதாரம் முதலாக நிற்கும். நமசிவாய என்ற இறைவனை உடலில் பொருந்துமாறு செய்துவிடும்.

சூக்கும பஞ்சாட்சரம் என்பது சிவாயநம என்பதை ஒளியாக நினைந்து ஓதுதல் ஆகும். சிவாய சிவ சிவ என்பது அதிசூக்கும பஞ்சாட்சரமாகும். சிவயநம என்பது சிவ பஞ்சாட்சரம். சிவாயநம என்பது சத்தி பஞ்சாட்சரம். வகாரம் நீண்டு தீர்க்கமாக இருப்பதால் சத்தி பஞ்சாட்சரமாகும்.

மனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா? ஆச்சர்யம்! ஆச்சர்யம்!!!

மனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா? ஆச்சர்யம்! ஆச்சர்யம்!!!

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.

2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.

3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்.

4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை.

5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்று முன்னாடியே (குறை பிரச வம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்.

6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும்போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத் தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது.

7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்.

8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன.

9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விர லில் நக ம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது.

10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம், இந்த ப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்.

11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது.

12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட் டை விரல்கள்.

13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு.

14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்.

15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது.

16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630.

17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது.

18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன.

19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது.

20. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள் அடக்கி விடலாம்.

21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ.

22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது.

23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள் ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது.

24.பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது.

25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.

26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்.

27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்.

28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள் கிடை யாது.

29. மூளையின் மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது.

30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்.

31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை / கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற வேறுபாடே தெரியாது.

32. மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம்.

33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன.

34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம் ஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான் அவன் அந்நியன் தான்.

35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வினியோகம் ஆகிறது.

36. நமது உடலிலுள்ள செல்கள் பிரிந்து இரண்டாகும் தன்மையு டையது. ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன.

37. தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4 வருஷம் வரை வளர்கி றது. அதன்பின் 3 மாதம் வளராமல் இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம் வளர்கிறது.

38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது.

39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது. ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை, கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால் போது ம், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்.

40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத் திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது.

41. நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்.

42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100 சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளையே.

44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீ தம் கூடுதலாக வியர்க்கிறது.

45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்.

46. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே.

47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும் உட்கொள்கிறோம்.

48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப் பிகள் இருக்கின்றன.

49. நம்முடைய தலை ஒரே எலும்பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில் உருவானதாகும்.

50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளதாகவும், பெண்களின் முடியை விட ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என் றும் அறியப்படுகிறது.

51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்.

52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர்.

53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன.

55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது.

56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040 தடவை சுவாசிக்கின்றோம்.

57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)

58. நாம் பேசக்கூடிய வார்த்தை க்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால் சாதனைகளை நிகழ்த்தலாம்.

59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது. இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது.

60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்.

61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.

62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.

63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக குறைந்துவிட் டால் அசதி, சோர்வு, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும்.

64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர் எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர் வியர்வை வெளியிடுகிறான்.

65. சிந்தனையின் வேகம் அல்லது ஒரு யோசனையின் தூரம் என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150 மைல்களாகும்.

66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் அதிகமாக துடிக்கிறது.

67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும், மேவாய் கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்.

68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30 கோடி உயி ரணுக்கள் வரை இருக்கும்.

69. உடலில் உண்டாகும் உஷ்ணம் வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது.

70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்.

71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான் மனிதனுக்கு கோபம் வருகிறது.

72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம் ஆகும்.

73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக நீரை சுரக்கத் தொடங்கிவிட் டால் ஆணுக்கு பெண்குணமும், பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்.

74. தானாக மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம் ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது.

75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50 லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில் 22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால் மோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை.

76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான். அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான் அவரவர் இதயம் இருக்கும்.

77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள ‘ஆலவியோலி’ என் னும் சிறிய காற்று அறைகளின் எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்.

78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது.

79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன.

80. மனிதனுக்கு 3 வகையான பற்கள் உண்டு.

81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள் 9000 உள்ளன.

82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன.

83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும் தசை நாக்கு.

84. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை,மூளையின் வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால் உருவானது.

85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம் தூங்குகிறான்.

86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½ லட்சம் கரு முட் டைகளோடு தான் பிறக்கிறாள். இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம் நிரப்பலாம்.

87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்.

88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார் 375 முறை ஏற் படுகிறது.

89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம் தடவை லப்டப் செய்கி றது. வருஷத்திற்கு 4 கோடி தடவை.

90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20 சதுரஅடிகள்.

91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20 ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்.

92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900 பென்சில்களை உரு வாக்கலாம்.

93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7 பார் சோப்புகளை செய்ய லாம்.

94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல ஆணி ஒன்று செய்யலாம்.

95. மனித உடலில் அதிகமாக காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்.

96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதயம் வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது.

97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன் குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால் உபரியாக காற்றை உள்வாங்க கொட்டாவி விடுகிறோம்.

98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் நின்று விடுகிறது. இறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான் சின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வளர்ச்சி.

99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான் என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம் வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள் வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அவயத்தின் படைப்பின் நுட்பத்தை நவீன விஞ்ஞானத்தின் மூலம் காணும் போது பெரும் வியப்பில் ஆழ்த்தும் அத்தனை ஆச்சரியங்களையும் எழுதி முடித்துவிட முடியாது.

உதாரணத்திற்கு, நமது மூளையைப் பற்றி நவீன விஞ்ஞானம் அறிந்து கொண்டது மிகமிக சொற்பமானது தான் இன்னும் தெரியாத புரியாத விளங்கிக் கொள்ள முடியாத விநோதங்கள் ஏராளம், ஏராளம்..

ஆண் குறி சிறியதாக உள்ளதா? இதோ தீர்வு

கேள்விகள் : 1. டாக்டர், என் ஆண் உறுப்பு சின்னதாக உள்ளது. இதனால் நான் திருமணம் வேண்டாம் என்று நினைக்கிறேன். இதை எப்படி பெரிதாக்குவது?
2. என் காதலி என்னை கூப்பிடுகிறாள், ஆனால் என் ஆணுறுப்பு சின்னதாக இருக்கு, அதைப் பார்த்தாள் அவளுக்கு சிரிப்பு தான் வரும் என்று நினைக்கிறேன். இதை எப்படி சரி செய்வது?
3. என் ஆண்குறியை பெரிதாக்க வழிகள் என்னென்ன, சொல்லுங்கள் மருத்துவரே!
விடை :
இது போல பல கேள்விகள் தினமும் வந்து குவிந்த படி உள்ளன.இதற்கான விடை மிக விரிவானது என்பதால், ஒரே நாளில் அதனை எழுத இயலாது. இதனை பகுதிகளாக விவரிக்கிறேன்.
ஆண்குறிகளின் வகைகள் மற்றும் அளவெடுத்தல் முறை:
முதலில் உங்கள் ஆண்குறி உண்மையிலே மற்றவர்களின் குறியை விட சிறியதா என்று கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பான்மையானவர்களின் ஆண் குறி சராசரியான அளவுடையவை தான்.
உங்கள் ஆண்குறியை நீங்கள் விறைப்பாக இருக்கும்போது தான் அளவெடுக்க வேண்டும். உங்கள் குறி சாதரணமான (விறைப்பில்லாத) நிலையில் அளவெடுப்பது சரியான முறை அல்ல. ஏனென்றால் ஆண்குறிகள் இரண்டு வகைப்படும்.
வளரும் வகை (Growers): இந்த வகை ஆண்குறிகள் சாதாரண நிலையில் மிகவும் சிறியதாகவே இருக்கும். ஆனால் காம உணர்வு ஏற்பட்டு, விறைத்தால், மிகவும் நீளமாகி விடும். கிட்டத்தட்ட 80% மக்கள், இந்த வகை ஆண்குறியை கொண்டவர்களே.
காட்டும் வகை (Showers): இந்த வகை ஆண்குறிகள் சாதாரண நிலையிலேயே பெரியதாக இருக்கும், ஆனால் விறைப்படைந்தால், கொஞ்ச நீளமே அதிகமாகும். கிட்டத்தட்ட 20% மக்கள், இந்த வகை ஆண்குறியை கொண்டவர்கள்.
ஆண்குறியின் நீளத்தை அளவெடுக்கும் முறை:
1. இரண்டு நாட்களுக்கு சுய இன்பமோ, உடலுறவிலோ ஈடுபடாதீர்கள்.
2. முடிந்தால் இறுக்கமான உள்ளாடைகளை (ஜட்டி) இந்த இரண்டு நாட்களுக்கு தவிர்த்து விடுங்கள்.
3. துணியை அளவெடுக்கும் டேப் (measuring tape) ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள்.
4. இப்போது, யாருமில்லாத இடத்தில முழு விறைப்படையும் வரை சுய இன்பம் செய்யுங்கள்.
5. முழு விறைப்பு அடைந்ததும், எழுந்து நின்று, உங்கள் ஆண்குறியை தரையை நோக்கி கீழே தள்ளுங்கள். இப்போது, உங்கள் ஆண்குறி, உங்கள் உடம்பிலிருந்து 90 டிகிரியில் இருக்க வேண்டும்.
6. இப்போது அளவெடுக்கும் டேப்பை வைத்து, முழு ஆண்குறியை அளவெடுக்க வேண்டும்.
7. உங்கள் குறி கிட்டத்தட்ட ஐந்து இன்ச் (12.7 cm) நீளத்தில் இருந்தால், உங்கள் குறி சாதாரண நீளம் உடையது தான்.
8. உங்கள் குறி கிட்டதட்ட மூன்று இன்ச் (7.62cm) அளவில் இருந்தால், உங்கள் குறி மற்றவர்களை விட சிறியதாக இருந்தாலும், இதனால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது.
9. உங்கள் குறி இரண்டுக்கு இஞ்சுக்கு குறைவாக இருந்தால், உங்களுக்கு micropenis (மிகச்சிறிய குறி) என்கிற நோய் உள்ளது.



ஆண்குறியின் சுற்றளவை அளவெடுக்கும் முறை:
1. மேலே சொன்ன முறையிலே உங்கள் குறியை வைத்து, டேப்பை குறியின் சுற்றளவை அளவெடுங்கள்.
* உங்கள் ஆண்குறி உடலை சேரும் இடத்தில்
* நடு ஆண்குறியில்
* உங்கள் ஆண்குறியின் தலைப்பாகத்திற்கு முன்னால்
2. இந்த மூன்று எண்களையும் மூன்றால் வகுத்தால், உங்கள் சராசரி சுற்றளவு தெரிந்து விடும்.
3. இந்த சராசரி சுற்றளவு, 3.5-4 இன்ச் இருந்தால், உங்கள் குறியின் சுற்றளவு மற்றவர்கள் போலத் தான் உள்ளது.




மேலே சொன்ன முதல் பகுதியைப் பின்பற்றி உங்கள் ஆண்குறியின் அளவு என்ன என்பதை தீர்மானித்து இருப்பீர்கள். உங்கள் ஆண் குறி சிறியதானாலும் சரி, பெரியதானாலும் சரி, அதனை பெரிதாக்க பல வழிகள் உள்ளன. உங்கள் குறி சிறியதாக உளது என்று தொடர்ந்து கவலைப்பட்டு வந்தால், அது (Small Penis Syndrome) என்ற ஒரு மனத் தளர்ச்சியாக மாறக் கூடும். மருத்துவத் தொழில் முறைப்படி ஆண் குறியைப் பெரிதாக்குவது என்பது அறுவை சிகிச்சை முறையால் மட்டுமே செய்யப்படுகிறது என்று வாதிடப் படுகிறது. இருந்தாலும், இன்று ஆண் குறியை பெரிதாக்கும் வழிகளைப் பார்ப்போம்.
ஆண் குறிப் பயிற்சிகள்:
இந்தப் பயிற்சிகளை செய்யும்போது, வலி ஏற்பட்டால் உடனே நிறுத்தி விட வேண்டும்.
கறத்தல் முறை:



இது ஆரம்பிப்பதற்கு முன்னால்:
முதலில் உங்கள் ஆணுறுப்பை மென்மையாக மசாஜ் செய்து, அதனை பாதி விறைப்படைய செய்யுங்கள்(வேண்டுமென்றால் இளமை அல்லது செக்ஸ் கதைகள் படியுங்கள்)
ஒரு துணியையை(டவலை) மிதமான சூடான நீரில் முக்கி அதனை உங்கள் ஆணுறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் ஆணுறுப்பு சற்றே சூடாக தொடங்கும்.
இரண்டு நிமிடம் கழித்து, துணியை மறுபடி தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்
மறுபடி, இரண்டு நிமிடம் கழித்து, துணியை மறுபடி தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்
இப்போது உங்கள் ஆணுறுப்பு கறத்தல் முறைக்கு தயாராகி விட்டது.
கறத்தல் முறை:
உங்கள் ஆணுறுப்பை மறுபடி பாதி விறைக்க செய்யுங்கள்.
உங்கள் கட்டை விரலையும் ஆள் காட்டி விரலையும் வளைத்து படத்தில் உள்ள மாதிரி பிடித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் விரலால் ஏற்பட்ட வட்டத்தை, ஆணுறுப்பின் அடி முனையில் வையுங்கள் (சிவப்பான முனையில் அல்ல)
இப்போது மெல்ல, பால் கரைப்பது போல அடுத்த முனையை நோக்கி பால் கரைப்பது போல நீவி விடுங்கள்.
இப்படியே நீவி நீவி, சிவப்பு பாகத்தை தொடும் வரை செய்யுங்கள். சிவப்பான முனையை நெருங்கியதும் நிறுத்தி விட்டு, திரும்ப அடி முனையில் ஆரம்பியுங்கள்.
முதல் நாள் நூறு முறை செய்யுங்கள். அடுத்த நாள் பதினைந்து முறை கூட சேர்த்து (அதாவது நூற்று பதினைந்து முறை).
இப்படியே தினமும் கூட்டி, கூட்டி, ஒரு மாத காலத்தில், தினமும் நானூறு முறை இதை செய்யுங்கள்.
இதற்கு மேல் நீங்கள் உங்கள் செய்முறையை கூட்ட வேண்டாம், தினமும் நானூறு முறை இதனை செய்து வந்தால், சில மாதங்களில் நல்ல பலன் தெரியும்.
கெகல் (Kegel) பயிற்சி:



கெகல் பயிற்சி முறை பி.சி தசையை (pubococcygeus muscle) பயிற்சி செய்தால், உங்கள் ஆண்குறியை பெரிதாக்க முடியும். இந்த தசை வளைந்து, உங்கள் கடைசி முதுகெலும்பையும், உங்கள் ஆணுருப்புக்கு முன்னால் உள்ள எலும்பையும் இணைக்கும் தசையாகும். படத்தில் சிவப்பில் உள்ளது இந்த தசை தான்.
இந்த தசையை கண்டு உணர, நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது, நடுவில் நிறுத்துங்கள். எந்த தசையை உபயோகப்படுத்தி சிறுநீரை பாதியிலேயே நிறுத்தினீர்களோ, அது தான் இந்த தசை. இன்னொரு வழி உங்கள் ஆசன வாய்க்குள்ளே (குண்டிக்குள்ளே) விரலை விட்டு, உங்கள் குண்டியை இருக்க முயற்சி செய்யுங்கள்.எந்த தசையை உபயோகப் படுத்துகிறீர்களோ, அதுதான் இந்த தசை.
பயிற்சி முறை (தினமும் செய்ய வேண்டியது):
முதல் வாரம்:
இந்த தசையை ஐந்து நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.
இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.
இரண்டாவது வாரம்:
இந்த தசையை பதினைந்து நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.
இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.
மூன்றாவது வாரம்:
இந்த தசையை முப்பது நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.
இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.
நான்காவது வாரம்:
இந்த தசையை ஒரு நிமிடம் இறுக்கமாக ஆக்குங்கள்.
இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.
இந்த கெகல் பயிற்சியை நீங்கள் எங்கே வேண்டுமானாலும் செய்யலாம்.உங்கள் கைகளோ, அல்லது ஒரு தனி அரையோ தேவையில்லை. இந்த தசையை மட்டும் இறுக்கி, தளர்த்தி வந்தால் அடுத்த சில மாதங்களிலேயே பலன் தெரியும்.


மாத்திரைகள், களிம்பு (கிரீம்), மற்றும் பட்டைகள் (Patches):
மாத்திரைகள் :

இப்போதெல்லாம் இணையத்தளங்களிலும் , கடைகளிலும், ஆணுறுப்பைப் பெரிதாக்கும் மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆண் குறி பெரிதாக்க செய்யும் நல்ல மாத்திரைகளில் இந்த பொருட்கள் இருக்கும்: ஜின்க் க்ளூகொநெட் (zinc gluconate ), வைட்டமின் சி, மற்றும் எல்-அர்ஜினைன் (L-Arginine). மேலும் , நல்ல தரமான மருந்துகள் அவற்றின் உட்பொருட்களை குடுவையின் மேலேயே பதிவு செய்திருப்பார்கள். அவற்றைப் படித்து, அதனால் ஏதும் பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளது என்று பாருங்கள்.
களிம்புகள்( கிரீம்):ஆண் குறியைப் பெரிதாக்க நிறைய களிம்புகள் விற்கப்படுகின்றன. இவை ஆண் குறியின் நீளம் மற்றும் அகலத்தை அதிகப் படுத்தும் என்று கூறப்படுகிறது. இது தவிர, இவை நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வைக்கும் என்று சொல்லப்படுகிறது.இந்தக் களிம்புகளை தினமும் ஆண்குறியின் மேல் மென்மையாக தடிவ்க் கொள்ள வேண்டும். தடவிய பின் லேசாக சூடாகவும், இதமாகவும் இருக்கும்.



பட்டைகள் ( Patches ) :
மேல் நாடுகளில் இப்போது புதிதாக வந்திருக்கும் ஒரு விற்பனைப் பொருள் ‘penis enlargement patch’ . அதாவது ஆணுறுப்பு பெரிதாக ஒரு விதமான பட்டை விற்கப் படுகிறது. இந்த பட்டை காயத்திற்கு அடி பட்டால் போடப்படும் பாண்ட் எயிட் (band aid) போல இருக்கும். அதை நீங்கள் உங்கள் அடிவயிற்றில் ஒட்டிக் கொண்டால் போது, அதில் உள்ள மருந்துப் பொருட்கள் உடலால் உறிஞ்சப் பட்டு, உங்கள் ஆண் குறி பெரிதாகும். இந்தப் பட்டையை கிட்டத்தட்ட 48-72 மணி நேரம் வரை தினம் அணிந்து விட்டு, பின்பு எறிந்து விட வேண்டும். பிறகு வேறு ஒரு பட்டையை அணிந்து கொள்ள வேண்டும்.
கருவிகள் :




  ஆண் குறியைப் பெரிதாக்க பல கருவிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்போம்.
ஆணுறுப்பு பெரிதாகச் செய்யும் பம்புகள் (Penis Pump)



ஆணுறுப்பைச் சுற்றி அணியும் வளையம் (Cock Ring)
நீளமாக்கும் கருவி (Penis Extenders)
.:: முற்றும்::.

பெண்களின் ஜி ஸ்பாட்…. அதிரவைக்கும் ஜி ஷாட்

ஆர்கஸம் சரியாக இருக்கவேண்டும் என்பதற்காக பலரும் என்னென்னவோ செய்கின்றனர். சத்தான உணவு, கிளர்ச்சியான பேச்சு, செயல்பாடுகள் இருந்த போதிலும் ஆர்கஸம் சரியில்லை என்று அலுத்துக்கொள்கின்றனர் பெண்கள். இதுபோன்றவர்களை குறிவைத்து ஜி ஷாட் என்ற ஊசி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது பெண்களின் ஜி ஸ்பாட்டை பெரிதாக்கி ஆர்கஸத்தை அதிகரிக்குமாம்.
செக்ஸ் உலகில் ஜி ஸ்பாட் என்ற வார்த்தையைப் பிரயோகிக்காத வாயே இல்லை இன்று. அது உண்மையா கற்பனையா என்று கூட இதுவரை யாராலும் தெளிவாக வரையறுக்க முடியவில்லை இருந்தாலும், இதுதான், இதேதான் என்று ஒரு ஏரியாவை மனதில் நினைத்து அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகிறார்கள்.

அந்த ஜி ஸ்பாட்டில் ஜி ஷாட் எனப்படும் ஊசியைப் போட்டுக்கொண்டால் ஒரு பழைய பத்து பைசா நாணயம் அளவுக்கு தற்காலிகமாக பெரிதாகி விடுகிறதாம். இதன் மூலம் கூடுதல் இன்பம் அனுபவிக்க முடியுமாம். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த ஜி ஷாட் ஊசி பற்றிதான் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இதுவரை 2000க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ஊசியைப் போட்டுக் கொண்டுள்ளனராம்.

இந்த ஊசியின் விலையானது 800 பவுண்டுகள்தான். அரை மணி நேரத்தில் ஊசி போடும் வேலை முடிவதால் பெண்களிடையே இதற்கு ஏக டிமாண்ட். ஊசி போட்ட பின்னர் பெண்களின் உறுப்புப் பகுதியில் உள்ள ஜி ஸ்பாட்டானது விரிவடைந்து கூடுதல் இன்பத்திற்கு வழி வகுக்கிறதாம். இதைக் கேள்விப்பட்ட லாஸ் ஏஞ்சலெஸ் பெண்கள் இந்த ஊசியைப் போட அலை மோத ஆரம்பித்துள்ளனராம்.
இது பற்றி கருத்து கூறியுள்ள மகப்பேறு மருத்துவரும், அறுவைசிகிச்சை நிபுணருமான டேவிட் மெட்டலாக், இந்த ஜீ ஷாட் ஊசியை போட்டுக்கொள்வதன் மூலம் பெண்கள் முன்பை விட உற்சாகமாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் ஊசி போடும் மருத்துவமனையில் வாரா வாரம் ஒரு விளக்க வகுப்பையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஊசி அறிமுகமாகி விட்டாலும் கூட சமீப காலமாகத்தான் இதற்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாம். இந்த ஊசியைப் போட்ட பல பெண்களும், தங்களது செக்ஸ் வாழ்க்கை முன்பை விட படு உற்சாகமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இந்தியாவிலும் வெகு விரைவில் ஜி.ஷாட் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வருந்துவது கீழ்க்கண்ட காரணங்களால்தான்

1. என் ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது.
2. அதிகமான சுய இன்பத்தினால் என் உறுப்பு சிறுத்துவிட்டது.
3. விந்து விரைவில் வெளியேறிவிடுகிறது.
4. பெண் உறுப்புக்குள் நுழைக்க முடிவது இல்லை. அதற்குள் தளர்ந்து விடுகிறது.
5. என் சிறிய உறுப்பால் என் மனைவியைத் திருப்திப்படுத்த முடிவதில்லை.
மேற்கண்ட பிரச்சினை இருப்பவரா நீங்கள்..? அப்படியானால் அவசியம் வாசிக்கவேண்டிய திரி இது.
முதலில் உங்கள் பிரச்சினைகளை நினைக்கும் முன் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.
1. மனசுக்குள் நிறைய கற்பனைகள் செய்பவரா நீங்கள்..? அதீத கற்பனைகளால் உந்தப்பட்டு சுய இன்பம் செய்துகொள்பவரா நீங்கள்..?
2. உடல்பயிற்கிகள் செய்யாதவரா நீங்கள்..? வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகளை இறுக்கி வைக்கும் க்ரெஞ்ச் என்னும் உடல்பயிற்சியை செய்யாதவரா நீங்கள்..?
3. தொந்தி / தொப்பை உடையவரா நீங்கள்..?
4. ப்ளட் ப்ரெஷர் மற்றும் சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்பவரா நீங்கள்..?
மேற்கண்ட அனைத்துக்கும் ஆம் என்று பதில் இருந்தால் கட்டாயம் உங்களுக்கு கீழ்க்கண்ட பிரச்சினைகள் இருக்கும்.
1. விந்து முந்தி வெளிய்யெறுதல்
2. விறைப்பின்மை
3. ஆண்குறி சிறியதாக மாறுதல்.
மேற்கண்டவற்றைத் தவிர்க்க முயன்றால் இப்பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெறலாம். குறிப்பாக பி பி மற்றும் சுகருக்கான மாத்திரைகள் நம் உடலில் இரத்த ஓட்டத்தை மட்டுப்படுத்தி ரத்தத்தில் இருக்கும் க்ளூகோஸைக் கட்டுப்படுத்தக் கூடியவை. இயல்பான விறைப்புத்தன்மைக்கு ரத்த ஓட்டம் மிகுதியாக இருத்தலும் க்ளூகோஸின் அளவு சரியாக இருத்தலும் மிக அவசியம். எனவே மேற்கண்ட நோய்களை உடையவர்கள் தங்களது நிலைமை உணர்ந்து அதீத ஆசைகள் படுவதைத் தவிர்க்கலாம்.
* மேற்கண்ட வியாதிகள் அல்லாமல் இளைஞர்களாய் இருப்பவர்களுக்கு இப்பிரச்சினை இருப்பின் அதீத கற்பனைகளைத் தவிர்த்து இயல்பாக இருக்கப் பழகிக்கொள்ளவேண்டும்.
  
* சரியான உடற்பயிற்சிகளைச் செய்து உடலைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
* புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை அறவே ஒழிக்கவேண்டும்.
* ஒருபாகம் வெந்தயத்துடன் இரண்டு பாகம் நீர்சேர்த்து வேகவைத்து நீர் வற்றியபின் தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி பெருகும்.
* ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறிகூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும். காமக்கிளர்ச்சியிலிருந்து உச்சநிலைக்கு அழைத்துச்செல்வது உறுப்பு உரசல்தான். ஆண்குறி இல்லாமல் லெஸ்பியன்கள் உறுப்பு உரசல் மூலம் உச்சமடைகிறார்கள். சுய இன்பமும் செய்து கொள்கிறார்கள். காமத்துக்கு வடிகால் தேடாதவர்களின் ஆண்குறிதான் எப்போதும் பாதி விறைத்த நிலையில் இருக்கும். அதை பெரிய ஆண்குறி என்று எடுத்துக்கொள்ள முடியாது. காம சிந்தனைகள் அற்ற நிலையில் பெரும்பாலான ஆண்குறிகள் மூன்றிலிருந்து ஐந்து அங்குலங்கள்தான் இருக்கும். இதனால் அதை சிறுத்த ஆண்குறி என்று சொல்ல முடியாது.
* அதீத சுய இன்பத்தால் அதிக விந்து வெளியேறி உறுப்பு தளர்ந்து விட்டதாகவும் விந்து குறைந்துவிட்டதாகவும் நினைப்பதும் தவறு. யாராவது நான் அதிகமாக எச்சில் துப்பும் பழக்கத்தால் வாய் தளர்ந்து எச்சில் ஊறுவதும் குறைந்து விட்டது என்று சொல்லி கேட்டிருக்கிறீர்களா? எச்சில் துப்புவதும் ஊறுவதும் போலவே விந்தும் ஊறிக்கொண்டும் வெளியேறிக்கொண்டும் இருக்கிறது. சுய இன்பப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் கூட மாதத்தில் இரண்டொரு முறை தானே விந்து வெளியேறிவிடும். இது ஒரு குறையே அல்ல மாறாக இது ஒரு ஆரோக்கியமான நிலை.
* முறையற்ற திருட்டுத்தனமான உடல் உறவில் விந்து சீக்கிரம் வெளியேறுவது இயல்பு. தக்க சூழலும் அமைதியும் நிம்மதியும் இருக்கும் போது உடலுறவு நீண்ட நேரம் நீடிக்கிறது.
* உரிமை இல்லாதவரிடம் மாட்டிக்கொண்டு விடுவோமோ என்னும் பயத்தில் ஈடுபடும் உடலுறவு பலவீனமானதாக முடியும். அதைக்குறித்து அஞ்சாமல் அமைதியான சூழலில் ஈடுபடுதல் நல்லது.

காமத்தை அடக்கும் வழிகள்!!

உலகில் மனிதனுக்கு காம எண்ணம் தோன்ற வேண்டுமென்றால் அதற்கு முதலில் மூளை காம எண்ணத்தை ஏற்படுத்தி கட்டளை பிறப்பிக்க வேன்டும். அதன் பிறகு உடல் தன்னை தயார் செய்து கொண்டு உறவில் இறங்குகிறது.
ஆனால் இந்த காம வேலையில் மட்டும்தான் மூளை தன் சொந்த கருத்துகலோடு, வேரொருவரயும் ஆலொசிக்கிறது.அவர் வெளியாள் அல்ல.
மரபணு எனப்படும் ஜீன் – கள் தான் அவை.


பெண்களின் காம உணர்வை விட அதிகமான காம உணர்ச்சி கொண்ட ஆண், அவனது காமப்பசியை அதிகமாக மறைத்து வைப்பதில்லை. உடலுறவின் போதும், உடலுறவின் முடிவில் வரும் உச்சக்கட்டத்தின் போதும் ஆண்கள் மிகுந்த ஆனந்தம் அடைவதுண்டு என உடலுறவு ஆராய்ச்சி நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆண் தனது காம உணர்வை வெளிப்படுத்த பல வழிகளையும் கையாள்வதுண்டு. உதாரணமாக ஒரு ஆண் சினிமாவில் ஹீரோவாக ஜொலிக்கும் போது எந்தப் பெண்ணும் அவனை விரும்புகிறாள். அவனாலும் தான் நினைத்த பெண்ணை அனுபவிக்க முடிகிறது.
உடலுறவு குறித்துக் கற்பனை செய்யாத மனிதர்கள் மிகக் குறைவு எனக் கூறலாம். அதிகமான காம உணர்வு உள்ள ஒரு ஆண் பல பெண்களுடனும் ஒரு பெண் பல ஆண்களுடனும் இனச்சேர்க்கை பல முறைகளில் செய்வதாகக் கற்பனை செய்வதும் உண்டு.
காம உணர்வானது மனிதர்களின் கற்பனையில் பல முறைகளில் கையாளப்பட்டு வருகிறது. ஸேடிசம் (sadism) என்பது காமக் கேளிக்கையின் போது தனது துணையை வேதனைப்பட வைத்து அந்த வேதனையை சுகமாகக் கருதி தனது காம உணர்ச்சியைத் தணித்துக் கொள்ளும் ஒரு அரக்கத் தன்மை உடையதாகும்.
இருக்கின்ற கட்டுப்பாடுகளிலேயே மிகவும் கடினமானது உணர்வுக் கட்டுப்பாடுதான். இவ்விஷயத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டு வர முடியாது என்ற எண்ணம் மனிதனுக்கு இருக்கிறது. காம உணர்வை அன்பு என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். காமத்தின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது என்று பரவலாக ஓர்அபிப்பிராயம் இருக்கிறது. காமத்தின் காரணமாக பெரிய குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
காம உணர்வைக் கட்டுப்படுத்துவதற்காக சமூகம், பலவிதமான கட்டுப்பாடுகளை உருவாக்கி இருக்கிறது. பெரும்பாலும் இந்தக் கட்டுப்பாடுகள் உடைக்கத்தான் படுகின்றன. அப்படியே காமம் தடுக்கப்பட்டாலும் பின்னால் அது பெரிய வெடிபோல் வெடிக்கத்தான் செய்கிறது. இதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் கட்டுப்பாட்டுகளால் காமத்தை அடக்க முடியாது. காமத்தை விட உயர்ந்த தெய்வீக அன்பு என்ற ஒரு பெரிய சக்தியைக் கொண்டு தான் இந்த உணர்வையே நம்மால் திருவுருமாற்றம் செய்ய முடியும். தெய்வீக அன்பு என்ற ஒரு சக்தி உலகில் செயல்படாவிட்டால் உலகம் inconscient நிலைக்குப் போய்விடும்.
உணவுப் பழக்கம் என்பது பல்வேறு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கூடிய விடயமாக நமது நாட்டில் கருதப்படுகிறது. உதாரணமாக, துறவிகள், பூசாரிகள், சன்னியாசிகள் ஆகியோர் சாத்வீக (உப்பு, காரம் இல்லாத) உணவுகளை உட்கொள்கின்றனர். அந்த உணவின் மூலம் உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தி கிடைக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.
உடல் நலனை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உணவு திகழ்கிறது. ஆனால் உணவின் மூலமாக மட்டுமே ஒருவருக்கு காம எழுச்சி ஏற்படுவதில்லை. இந்த விடயத்தில் மனித மனத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
எனவே, உணவுப் பழக்கத்தால் மட்டுமே காம இச்சையை குறைத்து விட முடியும் என்று எண்ணக் கூடாது.
வெங்காயம், பூண்டு, அசைவ உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்து பாதி உப்பு, பாதி காரத்தில் மட்டும் சாப்பிட்டால் காம இச்சை முற்றிலுமாக அடங்கிவிடாது. மனதைக் கட்டுப்படுத்துவதற்கும் சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
மனதை அடக்க தியானம் செய்வதே சிறந்தது என சில நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிலையில் தியானம் என்றால் என்னவென்றே பலருக்கு தெரியவில்லை. அதுபோன்றவர்கள் கடுமையான உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்ளலாம்.
உடற்பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாடப் பணிகளின் மூலம் தனது வேலைப்பளுவை அதிகரித்துக் கொள்ளலாம். தோட்டம் அமைக்கலாம், இதனால் அவர்களுடைய உடலில் ஏற்படும் இச்சைகளும், மனதில் ஏற்படும் மாசுகளும் குறையும்
எனவே, உடலை வருத்தி உழைத்து, ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் விதத்தில் சில பணிகளை மேற்கொண்டால் மனம் தெளிவுபெறும். அதுமட்டுமின்றி காமம் நிலையானது அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதளவில் உணர வேண்டும்.
அதனை உணர முடியாதவர்கள் நோயாளிகளுக்கு சில பணிவிடைகளைச் செய்வதுடன், அவர்கள் படும் அவஸ்தைகளை பார்த்தால் உடல் நிலையற்றது என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆணித்தரமாக பதிவாகிவிடும்.
பாலுணர்வுகளை மன தளவில் அடக்கி உடலளவில் அதன் தேவையையும் அடக்கலாம். அது இலகுவானது மனிதனைப் பொறுத்தவரை. கடினமானதல்ல. அதற்கு ஆண்கள் பெண்கள் தங்களைப் பழகப்பட்டுத்திக் கொண்டால் பாலியல் தவறுகள் நோய்கள் பெருகுவதும் கருக்கலைப்புகள் தொடர்வதும் தவிர்க்கப்படும்.
காமத்தை கட்டுபடுத்த முடியுமா ? எப்படி?
முனிவர்கள் காமத்தை கட்டுபடுத்தி எப்படி பல ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?
காமம் என்பது உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான உணர்வாகும் காமம் இழுத்த இழுப்புக்களுக்கெல்லாம் மற்ற உயிர்கள் உடன் பட்டு அடிமையாய் கிடக்கும் போது மனிதன் மட்டும் தான் அதை எதிர்த்து போராடி ஆறாவது அறிவை வளப்படுத்திக் கொண்டு வருகிறான் அதை எதிர்க்க முடியாமல் மண்டியிட்ட மனிதர்கள் யாரும் நிரந்தர வெற்றிமாலை சூடமுடியாது காமத்தை எதிர்த்து போராட்டம் என்பது அதனுடன் நேருக்கு நேராக நடத்தும் யுத்தமல்ல அது வரும்வழியை விட்டுவிட்டு மாற்றுப்பாதையில் நம்பயணத்தை துவங்க வேண்டும் அதாவது காமத்தை அடக்க முயற்ச்சிக்காமல் கடக்க முயற்ச்சிக்க வேண்டும் 24 மணிநேரமும் காமத்தை அடக்கவேண்டுமென நினைத்துக் கொண்டிருப்பதே ஒரு சுமைதான் அது நமக்குள் இருப்பதை மறந்துவிட்டு அல்லது ஊதாசீனப்படுத்தி விட்டு வேலையை கவனியுங்கள் தானாக சரியாகிவிடும் முனிவர்களும் இதைத்தான் செய்தார்கள் கூடவே உடலையும் மனதையும் கட்டுக்குள் வைக்கும் சில யோகாசனங்கள் செய்தார்கள் காரம் உப்பு புளி போன்ற சுவைகளை குறைத்தும் கொண்டர்கள்
காமத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்?
ஜோதிட ரத்னா
ஒருவரது ஜாதகத்தில் 3ஆம் இடம் இச்சைக்குரியதாக கொள்ளப்படுகிறது. இதில் இச்சை என்ற வார்த்தைக்கு காமம் என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. ஒரு சிலருக்கு பணத்தின் மீது இச்சை இருக்கும். மற்றொருவருக்கு உணவுப் பண்டங்களின் மீது இச்சை இருக்கும். சிலருக்கு தங்கள் தொழில் மீது இச்சை இருக்கும். உடல் இச்சையும் இதில் அடங்கும்.
பொதுவாக 3வது வீட்டில் நல்ல கிரகங்கள் இருப்பது சிறப்பான பலனைத் தரும். ஆனால் 6வது, 8வது, 12வது வீட்டிற்கு உரிய கிரகங்கள் 3இல் அமர்ந்திருந்தால் தினசரி உடலுறவு கொள்ளக் கூடிய நிலை அல்லது ஒரே நாளில் பலமுறை உறவு கொள்ளும் எண்ணத்தை அது ஏற்படுத்தும். இவர்களுக்கு லக்னாதிபதி சரியாக இருந்து விட்டால் இந்த எண்ணங்களை ஒழுக்க நெறிகள் மூலம் அவர்கள் கட்டுப்படுத்துவர்.
எனவே, 3வது வீட்டில் ஒருவருக்கு என்ன கிரகம் உள்ளது என்பதைப் பார்ப்பதுடன், லக்னாதிபதி யாருடன், எந்த வீட்டில் இருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும். ஏனென்றால் உடல், அழகு, எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றை நிர்ணயிப்பது லக்னாதிபதி.
காம இச்சை அதிகம் உடையவர்கள் இந்தக் கோயில் வழிபாடு அல்லது பரிகாரங்களை மேற்கொண்டால் பலன் கிடைக்கும் என்று பொதுவாகக் கூறிவிட முடியாது. அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளைக் கொண்டு தனிப்பட்ட முறையில் பரிகாரங்களை வகுக்க வேண்டும்.
லக்னாதிபதி பலவீனமாக, மறைந்து பாவ கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் முரண்பாடான இச்சைகள் மனதில் தோன்றும். உடலுறவில் திருப்தியற்ற நிலை ஏற்படும். மனைவியைப் பொறுத்த வரை கணவருக்கு போதுமான இன்பம் கொடுத்திருப்பார். ஆனால் கணவருக்கு அதனால் மனத்திருப்தி ஏற்படாமல் போகலாம். இதனால் சபலம் ஏற்பட வாய்ப்புள்ளது.

1 லட்சம் பேருடன் உடலுறவு கொள்ள கிளம்பிய பெண்ணுக்கு...

ஒரு லட்சம் பேருடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் பயணத்தை மேற்கொண்டுள்ள போலந்து நாட்டுப் பெண்ணுக்கு, எகிப்திலிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.

 இந்த அசிங்கத்தை அப்பெண் தொடர்ந்து நடத்தினால் அவரைக் கொலை செய்வோம் என்று எகிப்தைச் சேர்ந்த சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பெண் தனது அசிங்கமான செயலுக்காக எகிப்துக்குள் நுழையக் கூடாது. மீறி நுழைந்தால் நடப்பதே வேறு என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். போலந்து நாட்டின் வார்சா நகரைச் சேர்ந்தவர் அனியா லிசவ்ஸ்கா. 21 வயதான இவர் கிராபிக் டிசைனர் ஆவார். இவர் ஒரு லட்சம் ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

 விதம் விதமான ஆண்களுடன் உறவு கொள்ளப் போகிறேன். எனக்கு செக்ஸ் பிடிக்கும், அதிலும் நிறைய ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளப் பிடிக்கும். ஒரு லட்சம் ஆண்களுடன் உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு உறவு கொள்ளப் போகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

 இதுவரை அவர் 400 பேருக்கு மேல் உறவு வைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் அனியா தனது பயணத்தின் ஒரு கட்டமாக எகிப்துக்குச் செல்லவுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதற்கு எகிப்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எகிப்திலிருந்து தனக்கு நிறைய அழைப்புகள் வந்திருப்பதாகவும், அதை தான் ஏற்கப் போவதாகவும் கூறியுள்ளார் அனியா. எகிப்தைச் சேர்ந்தவரும் அங்குள்ள சுகாதாரத்துறையில் பணியாற்றி வருபவருமான முகம்மது அப்தல் மொனீம் என்பவர் அனியாவை எகிப்துக்கு அழைத்து வரும் பணியில் இறங்கியுள்ளாராம். அனியாவுக்குத் தேவையானதை செய்து கொடுக்கவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.

 அதேபோல அனியாவும் எகிப்துக்கு வருவதில் ஆர்வமாக இருக்கிறாராம். அழகான ஆண்கள் நிறைந்த நாடு எகிப்து என்று அவர் பெருமை பொங்கக் கூறியுள்ளாராம். ஆனால் அனியா எகிப்துக்குள் வந்தால் கொல்வோம் என்று சில அடிப்படைவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த எச்சரிக்கை அல்அரபியா இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் இதை நிராகரித்துள்ளார் அனியா. இதுகுறித்து அவர் கூறுகையில், எகப்தில் உள்ள அராபியர்கள் என்னை விரும்புகிறார்கள். நானும் ஆர்வமாக இருக்கிறேன். சிலர் மிரட்டியுள்ளனர். ஆனால் நான் அதை பொருட்படுத்தப் போவதில்லை. எதையும் நான் சமாளிப்பேன் என்றார். வாரா வாரம் வார இறுதி நாட்களில் மட்டுமே தற்போது உறவுகளை வைத்து வருகிறார் அனியா என்பது குறிப்பிடத்தக்கது.

காம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்!

மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன. செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக்கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

அதீத காமம் 
அதேசமயம் காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்கமுடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன.
பாலியல் குற்றங்கள் 
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடங்கி பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது வரை நடைபெறுவதற்குக் காரணம் காம உணர்வுகளை சரியான முறையில் கையாளத் தெரியாத காரணத்தினால்தான் என்கின்றனர் நிபுணர்கள்.
இதயநோய் வரலாம்
 காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல்பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள்.
முருங்கைக்காய்
முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லையாம்.
முட்டைக்கோஸ்
 அதேபோல முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
உடற்பயிற்சி

 செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியுமாம். ஏனென்றால் உடல் உழைப்பு இன்றி உண்டு கொழுப்பவர்களுக்குத்தான் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கிறதாம்.
மனதை மாற்றும் நூல்கள்
 ஆன்மீக நூல்கள் வாசிப்பது, நல்ல இசையை கேட்பது என அனுபவிப்பதன் மூலம் காமத்தை கரைக்கச் செய்யலாமாம்.
மது, போதை 
காம உணர்வுகளை குறைக்க மது, போதையில் மூழ்க வேண்டாம். அது காம உணர்வுகளை அதிகரிக்குமாம்.
நண்பர்களிடம் கூறலாம்

அடிக்கடி காம உணர்வுகள் ஏற்பட்டாலோ, அதீத காம வயப்பட்டாலோ மனதிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு கூச்சப்பட்டால் செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை கேட்கலாம்.

டீன் ஏஜ் பிள்ளைகளை எப்படியெல்லாம் கண்காணிக்கலாம்?

கண்காணிப்பது வேறு… கண்மூடித்தனமான நம்பிக்கை வேறு… பிள்ளைகளின் மேல் பெற்றோருக்கு நம்பிக்கை இருப்பது நல்ல விஷயம் தான்.  ஆனால், அந்த நம்பிக்கை, பிள்ளைகளின் எந்த நடவடிக்கைகளையும் கண்காணிக்க விடாமல் செய்கிற அளவுக்குக் கண் மூடித்தனமானதாக இருக்கக்  கூடாது!உங்கள் வளரிளம் பருவத்தைப் பற்றி சற்று நினைத்துப் பாருங்கள். அப்பருவத்தில் உங்களுக்குள் பாலுணர்வினால் உண்டான உடல் மற்றும் மன  கொந்தளிப்புகளைப் பற்றி சிந்தியுங்கள். அப்போதைய சூழலுக்கு அந்த உணர்ச்சிகளை அடக்கி ஆள்வது அவசியமாக இருந்திருக்கும்.

இதுவோ  செல்போன், ஃபேஸ்புக், கலாசாரத்தில் மூழ்கிக் கிடக்கும் சமுதாயம். இன்றைய வளரிளம் பருவத்தினரிடையே ‘டேட்டிங்’  கலாசாரம் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகப் பரவி வருகிறது. இது பெரிய நகரங்களில் மட்டும் அல்லாது சிறு நகரங்களிலும் சகஜமாகி  வருகிறது.

‘டீன் ஏஜ்ல இதெல்லாம் சகஜம். வயசாக ஆக எல்லாம் சரியாகிடும்’ என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகள் இன்று மற்ற  பாலினத்தாருடன் மேற்கொள்ளும் உறவுகளே நாளை அவர்களின் உறவுகள் நலமாக உருவாகுமா இல்லையா என்பதை முடிவு செய்யும்.  இந்த  நேரத்தில் உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளுடன் டேட்டிங் பற்றி கலந்தாலோசிப்பது அவசியம். அப்படிச் செய்யும்போது அவர்கள் கருத்துக்கு மதிப்பு  கொடுத்தபடி அதே நேரம் டேட்டிங் பற்றிய உங்கள் கொள்கைகளையும், அவற்றின் அடிப்படைகளையும் நாசூக்காக எடுத்துச் சொல்வதும் அவசியம்.

அந்த உரையாடலின் போது, ‘இதுதான் உங்கள் குடும்ப விதிமுறைகள், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்’ என்று கோட்பாடுகள்  அமைத்தீர்களேயானால், உங்கள் பிள்ளைகள் அதை மீறத்தான்  நினைப்பார்கள். மாறாக அவர்களுடைய குறிக்கோள்களுக்கும், எதிர்காலத்துக்கும் எது  நல்லது, எது உதவாது என்று அவர்களே உணரும்படி எடுத்துக்கூறுங்கள்.

சரி… பேச்சை எப்படி ஆரம்பிப்பது? இதுதானே உங்கள் குழப்பம்?

அந்த நேரம் செய்திகளில் அடிபடும் பிரபலங்களின் வாழ்க்கைச் சிக்கல்களை முன்வைத்தே இதைப் பற்றிய உரையாடலைத் தொடங்கலாம்.  பிரபலங்களின் வாழ்க்கைப் பிரச்னைகளில் இருந்து என்ன பாடங்கள் கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றி பேசலாம். பிரபலங்களின் உறவுகளில் எவை  நலமானவை, எவை நலமற்றவை என்பதை எடுத்துரைத்தீர்களேயானால் அது ஒரு லெக்சராக இல்லாமல்  சுவாரஸ்யமான உரையாடலாக அமையும்.

இதுதான் நம் குடும்ப விதிமுறைகள், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு வெளிப்படையாக எடுத்துச்  சொல்வதற்கு மாறாக, குறிப்பிட்ட அந்த பிரபலத்தின் வாழ்க்கை, சிக்கலில் முடியாமலிருக்க அவர்கள் தம் டீன் ஏஜ் பருவத்தில் எப்படியெல்லாம்  நடந்து கொண்டிருக்கலாம் என்று டிஸ்கஸ் செய்தால் விதிமுறைகள் நாசூக்காக உள்ளேறும்.
பிறகு உங்கள் கட்டுப்பாடுகளை ஒப்பந்த நோக்குடன் எடுத்துச் சொல்லி, உங்கள் டீன் ஏஜ் பிள்ளையுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம்.



உதாரணத்துக்கு, உங்கள் பெண் ஒரு பார்ட்டிக்கு சென்று இரவு 10 மணிக்கு வீடு திரும்பும் திட்டத்துடன் இருக்கிறாள் என வைத்துக் கொள்வோம்.  முதலில் பார்ட்டி நடக்கும் இடத்துக்கு நீங்களோ வேறு பொறுப்பான நபரோ அவளை கூட்டிச் சென்று அங்கு நம்பகமான, பொறுப்பான நபரிடம்  ஒப்படைக்க ஒப்பந்தம் பேசலாம். அந்த நபர், உங்கள் பெண் பொறுப்புடன் நடந்து கொள்வதை கண்
காணிக்கக்கூடிய ஆண்மகனாகவும் இருக்கலாம்.

பிறகு 8 மணிக்கு நீங்களோ, வேறு நம்பகமான நபரோ சென்று அவளை தெரிந்த நபரிடமிருந்து அழைத்து  வர, அவளுடன் ஒன்று சேர்ந்து  முடிவெடுக்கலாம். அதை விட்டு விட்டு ‘பார்ட்டிக்கு செல்லக்கூடாது, ஆண் பிள்ளைகளுடன்  நட்பு கூடாது, 8 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும்’  என்று நீங்கள் கட்டுப்பாடுகளை விதித்தால் உங்கள் பிள்ளையிடம் உங்களுக்கு உள்ள உறவு முறிவதுடன், அவள் உங்கள் பேச்சை மீறுவதற்கும்  வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறீர்கள் என அர்த்தம். தவிர அவள், தன் நடவடிக்கைகளை உங்களிடமிருந்து மறைக்கவும் துணிவாள்.

அவளுடன்  சேர்ந்து முடிவெடுப்பதால் அவள் விருப்பப்படியே எல்லாம் நடக்கிறது என்ற உணர்வு ஏற்படுவதுடன், அந்த முடிவுக்கு அவளும் பொறுப்பு  என்ற உணர்ச்சியை உண்டாகும். அதோடு, உங்கள் மேல் அவள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் கூடி, உங்கள் இருவருக்குமான பந்தம்  பலப்படுத்தப்படும். “சரி, என்னுடைய பிள்ளை செக்ஸ் சிந்தனையில் ஈடுபட மாட்டாள் என்று எப்படி உறுதிப்படுத்தலாம்’’ என்று கேட்டீர்களேயானால்  அதற்கு ஒரே பதில் – ‘முடியாது’.

அவள் அவ்வித சிந்தனைக்கு ஆளானாலும் பொறுப்புடன் நடந்து கொள்வாள் என்ற நம்பிக்கையைதான் வளர்க்க முடியும். அது, நீங்கள் அவளுடன்  செக்ஸ் பற்றி எவ்வாறு பேசியிருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.  இன்று 10 வயது பிள்ளைகளே செக்ஸ் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள்.  அதனல் டி.வியில் ஆபாசக் காட்சிகள் வரும் போது ‘பார்க்காதே’ என்று கண்களை மறைப்பதோ, ‘போய் தண்ணி கொண்டு வா’ என்று திசை  திருப்புவதோ இன்று பொருந்தாது. அதைத் தவிர்த்து அந்த நேரத்தில் செக்ஸ் பற்றி வயதுக்குத் தகுந்த விதத்தில் பேசினால், பிள்ளை வளர்ந்த பிறகு  பாலுணர்வு பற்றி அவளுடன் பேசவும் போதிக்கவும் உதவும். அப்படிப் போதிக்கும் போது சில விஷயங்களை நீங்கள் அவசியம் வலியுறுத்த வேண்டும்.

அதாவது…

சற்றே வயது முதிர்ந்த ஆண் பிள்ளைகள், இளம்பெண்களைக் கவரக்கூடிய அபாயம் பற்றி… அவர்களில் சிலரிடம் உள்ள பணம், வாகனம் போன்றவை  அந்த ஈர்ப்பை இன்னும் அதிகப்படுத்தக் கூடிய அபாயம் பற்றி…

அதன் தொடர்ச்சியாக பாலுறவில் ஈடுபடும் ரிஸ்க் தலைதூக்குவதைப் பற்றி…

அந்தத் தகாத உறவில் ஈடுபடுவதால் உண்டாகும் இன்னல்கள் (பாலியல் நோய் முதல் இளவயது கர்ப்பம் வரை) பற்றி…

இளவயதில் காதல் வயப்பட்டு, பெற்றோரை எதிர்த்துத் திருமணம் செய்து, குடும்பம் மற்றும் சமுதாய ஆதரவின்றி, தவிக்கிறவர்களைப் பற்றி…

இவை எல்லாவற்றையும் பற்றி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தலாம். ‘என் பெண் அப்படிப்பட்டவள் அல்ல. தவறு செய்ய மாட்டாள்’  என்று  கண்மூடித்தனமான நம்பிக்கையில் இருக்கும் பெற்றோர், அவர்களின் பெண் ‘காம’ வலையில் சிக்கிய பிறகு படும் அவஸ்தைகளைப் பற்றிச்  சொல்வதற்கு ஆயிரமாயிரம் கதைகள் உண்டு என்னிடம்… காலத்துக்கேற்ற விழிப்புணர்வுடன் நடந்து கொள்வதே இந்த விஷயத்தில் பெற்றோருக்கு  நான் சொல்ல விரும்புகிற ஒரே அட்வைஸ்… விழித்துக் கொள்ளுங்கள் பெற்றோரே! மீடியாவின் தாக்கத்தில் டீன் ஏஜ்… எப்படி மீட்பது?
 https://shorte.st/ref/6c080cb9df

மசாஜ் ஏன்? யார்?எப்போ?எப்படி?

இன்றைய சூழ்நிலையில் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனை போன்றவற்றால் முதலில் வருவது மன அழுத்தம என்னும் நோய்தான்.இத்தகைய மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடாவிட்டால், உடல் நிலையானது இன்னும் மோசமாகிவிடும். குறிப்பாக இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்றவையும் சீக்கிரமே வந்துவிடும். ஆகவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஒருசிறந்த நிவாரணிகளில் முக்கியமானது மசாஜ்.மசாஜ்களில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு இடத்திலும் மசாஜானது வித்தியாசப்படும். பொதுவாக அனைத்து வகையான மசாஜ்களும் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியவைதான்.எனவே மன அழுத்தத்தில் இருந்து விடுபட நினைத்தால் ஒரு சில மசாஜ்களை பின்பற்றி வர வேண்டும்.

அதிலும் இயற்கை மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது இந்த மசாஜ். மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா, சீனா, கிரீஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மசாஜ், நோய் தீர்க்கும் ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

மசாஜ் செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு எவ்வாறு நலம் பயக்கிறது என்பதை விரிவாக காண்போமா?.

மசாஜ் செய்வதால், தோலில் ஏற்படும் நன்மைகள் ஏராளம். மசாஜ் செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைந்து, உடலில் காணப்படும் தீய கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறி விடும். மசாஜ், தசைகளின் இறுக்கத்தை குறைத்து, தசை வலியை நீக்குகிறது. கடினமான வேலைகளால் உடல் தசைகளில், “லாக்டிக் ஆசிட்’ சேரும். மசாஜ், தசைகளில் சேரும், “லாக்டிக் ஆசிட்’களை நீக்கி, உடலை புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருக்க உதவும்.

ரத்த ஓட்டம்: மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், அவ்வுடல் உறுப்புகளுக்கு அதிகளவில் ஊட்டச்சத்து கிடைப்பதுடன், அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வீக்கம் போன்றவை ஏற்படுவது குறையும். மசாஜ் செய்வதால் ரத்தத்தில் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.

நரம்பு: நரம்புகளில் குறைந்த அழுத்தத்துடன், மெதுவாக மற்றும் மிதமாக செய்யப்படும் மசாஜ், நரம்புகளில் காணப்படும் இறுக்கத்தை குறைத்து, அவற்றை மென்மையாக்கி. சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். நரம்புகளை இளக்கமடைய வைத்து அதன் ஆற்றலை அதிகரிக்கும்.

செரிமான மண்டலம்: வயிற்றில் மசாஜ் செய்வதால் செரிமான மண்டலம் தூண்டப்படுவதுடன், வயிற்றில் காணப்படும் கழிவுகளும் நன்கு வெளியேறும். மேலும் கல்லீரலின் ஆற்றல் அதிகரிப்பதால், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சிறுநீர் மண்டலம்: மசாஜ் செய்வது, சிறுநீர் மண்டலத்தை நன்கு செயலாற்ற தூண்டுகிறது. இதனால் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாகி, அதன் மூலம் உடல் கழிவுகள் விரைவில் வெளியேறுகின்றன.

இதயம்: முறையாக செய்யப்படும் மசாஜ், இதயத்தில் ஏற்படும் பளுவை குறைத்து, அதன் செயல் திறனை அதிகரிக்கிறது.

பொதுவாக, மசாஜ் செய்வதற்கு உலர்ந்த கைகளையே பயன்படுத்த வேண்டும்; ஆனால், உடல் அதிக வறட்சி தன்மை உடையதாக இருந்தால் அல்லது உடல் மிகவும் பலவீனமாக இருந்தால், ஈரத் துணி அல்லது மருந்து எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். மசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலர் மசாஜ் செய்யும் போது ஏற்படும் உராய்வை தவிர்ப்பதற்காக, டால்கம் பவுடரை பயன்படுத்துகின்றனர். இது உகந்தது அல்ல. இவ்வாறு செய்வதால் தோலில் காணப்படும் துளைகள் அடைபடும்.

மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்:

* காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் எவ்வித மசாஜும் செய்யக்கூடாது.

* கர்ப்பிணி பெண்கள் வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.

* வயிற்றுப் போக்கு வாயுப் பிரச்சினை, அப்பென்டிசைட்டிஸ், சிறு குடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்னை உடையவர்கள் வயிற்றில் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

* தோல் வியாதி உடையவர்களுக்கு மசாஜ் செய்வது பொருத்தமற்றது.

https://shorte.st/ref/6c080cb9df 

பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..?

Menstruation
கல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில், பருவமடைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே பள்ளிக்குப் புத்தகச் சுமையுடன் அனுப்பி விடுகிறோமே, இது எந்த அளவில் அவர்கள் உடல், மனநிலையைப் பாதிக்கும்?

அக்காலத்தில் 16 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என முதியோர்கள் கூறியது மருத்துவரீதியாக அவசியமற்றதா? இக் கேள்வியை வெவ்வேறு பிரிவுகளில் உள்ள மூன்று மருத்துவர்களின் முன் வைத்தோம். இதற்கு அவர்கள் அளித்த பதில்:

டாக்டர் கீதா அர்ஜுன்

(கைனகாலஜிஸ்ட், ஈ.வி. கல்யாணி நர்ஸிங் ஹோம்)

பெண்கள் பூப்பெய்தும் பொழுது அவர்களுக்குப் பதினாறு நாட்கள் ஓய்வென்பது

அவசியமேயில்லை. ஆண் பிள்ளைகளுக்கு மீசை முளைக்கும் பொழுது அவர்களை வீட்டிலா உட்கார வைக்கிறோம்? இல்லையே, அதே போல்தான் இதுவும்!

பெண்களுக்கு இது அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டம். இதற்காக அவர்களைத் தனிமைப்படுத்தவோ, ஓய்வு கொடுக்கவோ மருத்துவரீதியாகத் தேவையில்லை. இந்நிலை அவர்களுக்கு உடலளவில், மனதளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது. தேவைப்பட்டால் ரொம்ப ரத்தப் போக்கு, வயிற்றுவலி பிற இன்னல்கள் உள்ளவர்கள் அவர்களுக்கு தேவைப்படும் நாட்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி பூப்பெய்துவதென்பது ஒரு சாதாரண நிகழ்வுதான். பாலன்ஸ்ட் டயட் போதும். தனி உணவு முறைகள் எதற்கும் அவசியமில்லை.”

டாக்டர் சுசீலா ஸ்ரீவத்ஸ்வா:

(மனநலமருத்துவர், அப்போலோ மருத்துவமனை)

அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் எத்தனையோ வித வேறுபாடுகள். உடல் ரீதியாக, மன ரீதியாக சமூக ரீதியாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

சமூக ரீதியாக அப்பொழுதெல்லாம் பெண்கள் பூப்பெய்தவுடன் பெரிய விழாவாக எடுத்து சுற்றம், நட்பு என்று அனைவருக்கும் அறிவித்தனர். காரணம் பெண்ணின் திருமணத்திற்கு இந்த பப்ளிசிட்டி ஒரு தேவையாக இருந்தது. இன்று அப்படியில்லை. பத்திரிகைகள், திருமணப் பதிவு மையங்களில் பெயரைப் பதிவு செய்து வரன் தேட முடிகிறது.

இரண்டாவது உடல் ரீதியாக தற்காலக் குழந்தைகள் மிகவும்

ஆரோக்கியமாக வளர்க்கப்படுகிறார்கள். காரணம் இக்கால பெற்றோர்கள் ஒன்று, இரண்டு குழந்தைகளோடு நிறுத்திவிடுகிறார்கள். அதுவும் பெற்றோர்கள் விஷயம் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். உடலில் ஏதாவது கோளாறு, பாதிப்பு என்றால் தகுந்த சிகிச்சைகள் உடனடியாக அக்குழந்தைகளுக்குக் கிடைத்து விடுகின்றன. அந்தக் காலத்தில் பத்தோடு பதினொன்றாக வளர்க்கப்பட்டதால், ஆரம்பத்திலிருந்தே போதிய ஊட்டச்சத்து கொடுக்கப்படாததால் ‘அந்த நேரத்தில்’ மட்டும் ‘தனியாக’ கவனிக்கப் பட்டார்கள்.

இத்தகைய ‘தனி கவனிப்பு’ இக்காலக் குழந்தைகளுக்குத் தேவையில்லை. எனக்கு வயசுக்கு வந்த பொழுது தினமும் நல்லெண்ணெய் கொடுத்தார்கள். இப்பொழுது என் பெண்ணிற்கும் அதையே கடைப்பிடிக்க முடியாது. ஏனெனில் தற்கால உணவு முறைகளில் அவ்வாறு செய்வது உடலில் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். அதிகக் கொழுப்பு இருதயத்திற்கு அதிக பாதிப்பு.

மனரீதியாகப் பார்க்கும்பொழுது அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். பெண் வயசுக்கு வந்து விட்டால் தாவணி போட்டு விடுவார்கள். இப்ப அப்படிச் செய்ய முடியுமா? அதுவும் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியில் இத்தகைய பழக்க வழக்கங்கள் கேலிக்கும், கிண்டலுக்குமாகி மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் தற்போது பள்ளிகளிலெல்லாம் ஒரே விதமான உடைகள் தான். இதனால் ஒரு பெண் வயசுக்கு வந்து விட்டால் அதை அவள் யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியமும் ஏற்படுவதில்லை.”


சுப்புலட்சுமி

(சித்தமருத்துவர், கர்ப்பரட்சாம்பிகை கருகாப்பு நிலையம்)

வயதுக்கு வந்த உடன் பெண்களை தனியாக உட்கார வைப்பது சரிதான். அப்படி உட்கார இப்போதைய சிறுமிகள் விரும்புவது இல்லை. ஆனால் இப்பழக்கம் சுகாதாரமானதாக இருப்பதோடு, அவர்கள் மனதிற்கும், உடலிற்கும் முழு ஓய்வு கொடுப்பதும் அவசியம்.

முதலில் பயந்து போய் இருக்கும் குழந்தைக்கு தைரியம் கொடுத்து, இது இயல்பாகவே எல்லாப் பெண்களுக்கும் வருவது தான் எனக் கூறி அவர்களது மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். நம் ஊர்களில் வயதுக்கு வந்த உடன் பாலுடன் முட்டை கலந்து குடிக்கச் செய்வதும், நல்லெண்ணெயுடன் முட்டை கலந்து குடிக்கும் வழக்கமும் உள்ளது. இவை புரதச் சத்தும், கால்சியச் சத்தும் நிறைந்தவை. குளிக்கும் போது வயதுக்கு வந்த பெண்ணை நிறைய மஞ்சள் பூசிக் குளிக்கச் செய்வதும், தண்ணீரில் மாவிலை கலந்து குளிக்க வைக்கும் பழக்கமும் உண்டு. மஞ்சளும், மாவிலையும் மிகச் சிறந்த தொற்று நீக்கியாகச் செயல்படுகிறது. சில ஊர்களிலும், கிராமங்களிலும் கீரை விதை ஒரு தேக்கரண்டியுடன் பாலும் அருந்தும் பழக்கம் உள்ளது. கீரை விதை எலும்புகளுக்கு வன்மையை அளிக்கிறது.

கைக்குத்தல் அரிசியில் செய்த பிட்டு, பனைவெல்லாம் கலந்த மாவு உருண்டை தரும் வழக்கம் உண்டு. அரிசியில் இருக்கும் மாவுச் சத்தானது மற்ற தானியங்களில் உள்ள மாவுச் சத்தை விட வித்தியாசமானது. இந்த மாவுச் சத்தில் நூறு சதவீதம் அமினோ பெக்டின் என்ற சத்து இருக்கிறது. இது நாம் உண்ணும் உணவுகள் எளிமையாக செரிப்பதற்கு காரணமாக அமைகிறது. அரிசியில் எட்டு சதவிகிதம் புரதச் சத்து இருக்கிறது. இந்தப் புரதச் சத்தானது வளர்சிதை மாற்றத்தின் காரணமாக எளிதில் உடலை வளர்க்கும் சத்தாக மாறி நம் உடல் உள்ளுறுப்புகளை உறுதியாக்குகிறது. கைக்குத்தல் அரிசியில் வைட்டமின் ‘பி’ உயிர்ச் சத்து உள்ளது. இது தோலுக்கும், இரத்த நாளங்களுக்கும், ஊட்டத்தையும், உறுதியையும் அளிக்கிறது.

இரத்தப் போக்கு அதிகமாக இருந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் அதனை நிவர்த்தி செய்ய பனைவெல்லம் (இரும்புச் சத்து நிறைந்தது) கலந்த மாவு உருண்டை வழங்கப்படுகிறது.

உறவினர்கள் அனைவரும் வந்து குழந்தைகளை ஆசீர்வாதம் செய்வதுடன் வகை வகையாகச் சத்து நிறைந்த உணவுகளைப் ‘பொங்கிப் போடும்’ வழக்கமும் உண்டு. அதில் முக்கியமாக உளுந்தஞ்சோறு, உளுந்தங்களி, உளுந்தங்காடி முதலியவை செய்வார்கள். உளுந்து கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் இடுப்பு எலும்பிற்கு (pelvic bones) வன்மையைக் கொடுக்கும். புரதச் சத்து நிறைந்தவை.

தற்போது டீன் ஏஜ் பெண்கள் எங்கள் மருத்துவமனைக்கு வருவது

மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்றுவலி பிரச்சினைக்குத் தான். அவர்கள் வயதிற்கு வந்த உடன் பெற்றோர்கள் அவர்களுக்கு சத்தான உணவுப் பொருட்களைக் கொடுப்பதோடு, குறைந்தது ஒரு வாரமாவது முழு ஓய்வு கொடுத்து கவனித்துக் கொண்டால் மாதவிடாய்க் கோளாறுகள், முதுகு வலி முதலியவை வராது.

உடலுறவில் தெரிந்ததை விட தெரியாதவையே அதிகம்

செக்ஸ் பற்றி எத்தனையோ நம்பிக்கைகள் நிலவுகின்றன. அதில் பெரும்பாலானவை உண்மையில்லை. தாம்பத்ய உறவின் தேவையை அறிந்து கணவர்தான் மனைவியை

உறவுக்கு அழைக்க வேண்டும் இல்லையெனில் சிக்கலாகிவிடும் என்று பெரும்பாலான பெண்கள் அஞ்சுகின்றனர். அது தவறு மனைவியும் கணவரை காதலோடு அழைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். செக்ஸ் பற்றிய பழமையான நம்பிக்கைகளையும், உண்மைகளையும் பற்றி விளக்குகின்றனர் பிரபல பாலியல் நிபுணர்கள் படியுங்களேன்.

நம்பிக்கை: பெரிய பருமனான மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு ஆசை அதிகமாக இருக்கும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது!

உண்மை: தாம்யத்ய உறவிற்கு சிறிய மார்பகம், பெரிய மார்பகம் என்ற பாகுபாடு இல்லை. வம்சம், உடல்எடை, ஊட்டச்சத்துணவு போன்ற காரணிகளால் பெண்களுக்கு மார்பகங்கள் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ அமையும்.

நம்பிக்கை: தாம்பத்ய உறவு குறித்த அறிவு இருக்கும் பெண்களுக்கு ஏற்கனவே அதில் முன் அனுபவம் இருக்கும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது..!

உண்மை: தற்போது பெண்கள் அதிகம் படிக்கின்றனர். ஆண்களைப் போல வெளியே செல்கின்றனர். இதனால் அனுபவ அறிவு இல்லாமலேயே செக்ஸ் குறித்த அறிவைப் பெண்களால் பெறமுடியும்!

நம்பிக்கை: திருமணமான பெண் முதன் முதலில் உடலுறவு கொள்ளும்போது மெல்லிய ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு கிழிந்து வலியும் ரத்தமும் ஏற்பட்டால்தான் அப்பெண் கன்னித்தன்மை மாறாதவள் பெண் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது!


உண்மை: திருமணமான பெரும்பாலான பெண்களுக்கு முதன்முதலில் உடலுறவு கொள்ளும்போது மெல்லிய ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு கிழிந்து வலியும் ரத்தமும் ஏற்படுவதில்லை. பெண்களுக்கு ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு சாதாரணமாக மெல்லியதாகவோ அல்லது தடிமனாகவோ இருக்கலாம்.

ஹைமனில் இருக்கும் துவாரம் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ, திறந்தோ அல்லது மூடிய நிலையிலோ இருக்கலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கு உடலுறவிற்கு முன்பே ஹைமன் சவ்வு கிழிந்திருக்கலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளாத பெண்களில்கூட சிலருக்கு முதலிரவு உடல்உறவிற்குப் பின்னும் ஹைமன் கிழியாமல் இருக்கலாம்!

இதேபோல் பெண்களிடமும் செக்ஸ் குறித்த சில நம்பிக்கைகள் இருக்கின்றன.
நம்பிக்கை: முதல் இரவில் முழுமையான செக்ஸ் இன்பம் தரமுடியாத ஆண்களை ஆண்மை இல்லாதவர்கள் என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது..!


உண்மை: முதலிரவில் 80 சதவீத ஆண்களால் முழுமையான உடலுறவு கொள்ள முடியாது. பதற்றம், பயம் ஏற்படலாம். அதனால் அவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

நம்பிக்கை: உடல்உறவில் உச்சகட்ட இன்பம் கிடைக்கவில்லை எனில் அது ஆண்களிடம் உள்ளகுறை என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது!

உண்மை: உடல் உறவில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் முழுமனதோடு ஆண்களுடன் இணைந்து ஒத்துழைத்தால் அன்றி முழுமையான உச்சகட்ட இன்பத்தை பெறமுடியாது. ஆண்பெண் இருவரும் சமஅளவில் உடலும் உள்ளமும் இணைந்து உடலுறவில் ஈடுபடும்போதுதான் பெண்களுக்கு இன்பம் அதிகரிக்கின்றது என்பதைப் பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை: வயதாகி விட்டதாலும் மாதவிடாய் நின்றுபோனதாலும் மற்றும் ஆண்களுக்கு வயதாகிவிட்ட நிலையிலும் உடலுறவு அவசியமில்லை என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது..!

உண்மை: பெண்களுக்கு மாதவிடாய் நின்றுபோன பின்பும் பாதி வாழ்க்கை இருக்கிறது. அந்நிலையில் உடல்உறவு தேவையில்லை என பெரும்பாலான பெண்கள் நினைப்பது தவறு. வயதான காலத்திலும் வளமான உறவை பெண்கள் நினைத்தால் அனுபவிக்கலாம். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

நம்பிக்கை: கணவர் தான் மனைவியை உறவுக்கு அழைக்க வேண்டும் என்று நினைப்பது!


உண்மை: ஆண்கள் தான் முதலில் அழைக்கவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது தவறு! இருப்பினும் திருமணமான புதிதில் பெண்கள் வலியவந்து கணவரை அழைக்கும்போது சில ஆண்கள் தவறான அர்த்தம் ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையையே சிக்கலாக்கி விடுவார்கள். எனவே பரஸ்பரமான அன்பின் மிகுதியால் மனைவியும் கணவரை உறவுக்கு அழைக்கலாம்!

பெண்குறி, ஆண்குறி சுவைப்பதற்கான முறைகள்!!

XILISOFT VIDEO CONVERTER அல்டிமேட் 7.7.2 முழு பதிப்பு



XILISOFT VIDEO CONVERTER ULTIMATE 7.7.2 Full Version & Unblocked


நீங்கள் வீடியோ, ஆடியோ, மற்றும் அனிமேஷன் படங்களை கன்வெர்ட் செய்ய  முடியும். 150 க்கும் மேற்பட்ட வீடியோ வடிவங்கள் துணைபுரிகிறது.

  Xilisoft க்கான வீடியோ மாற்றி, எளிதாக வேகமாக, நம்பகமான,  அம்சங்கள் கொண்டுள்ளது. அனைத்து பிரபலமான வடிவங்கள் நிலையான வீடியோக்கள் மாற்றும் திறன் கொண்டது . இது தவிர, 3D வீடியோக்களை நிலையான வீடியோக்கள் இருந்து கன்வெர்ட் செய்யலாம் . அத்துடன் 3D வீடியோக்கள் மத்தியில் முறையில் மாற்றத்தை  ஆதரிக்கிறது. 

இப்போது நீங்கள் உங்கள் PSP, பிஎஸ் 3, ஐபாட், ஐபோன், ஆப்பிள் ,டிவி, கவிதை, கூகிள் தொலைபேசிகள், ஐபாட், iPad2 மற்றும் பிற டிஜிட்டல் மல்டிமீடியா சாதனங்களை விளையாட வீடியோ, ஆடியோ, மற்றும் அனிமேஷன் படங்களை மாற்ற முடியும். அனைத்து க்கான Xilisoft வீடியோ மாற்றி சாத்தியமானது. 

 விசேட அம்சங்கள் 

HD வீடியோக்களை (H.264/AVC, எஸ், AVCHD, MKV) மாற்றுவதற்கு  ஆதரிக்கிறது. தொகுப்புகளும் மாற்றும் நேரத்தை சேமிக்க. Multi-core ஆதரவு வேகமாக மாற்றும் திறன் கொண்டது. 

பயிர் வீடியோ, கலை விளைவுகள் (பழைய திரைப்பட விளைவு, கருப்பு மற்றும் வெள்ளை, போன்றவை) விண்ணப்பிக்க வசனவரிகள் / டிராக்குகள் / வாட்டர் சேர்க்க, கோப்புகளை ஒன்றிணைக்க மற்றும் மாற்றங்கள், பிளவு வீடியோவை சேர்க்க, வீடியோ கோப்பு அளவு சரி, செய்ய உதவும். 

இந்த ஐபாட், ஐபோன், ஆப்பிள் டிவி, PSP, பிஎஸ் 3, எக்ஸ்பாக்ஸ், கிரியேட்டிவ் சாதனங்கள் மற்றும் மேலும் பல சாதனங்களில் துணைபுரிகிறது. மோதல் அல்லது பொறுமையாக இல்லாமல், பின்னணியில் இயங்கும். 

கிட்டத்தட்ட அனைத்து எச்டி / எஸ்டி வீடியோ மற்றும் ஆடியோ வடிவமைப்புகளை மாற்ற முடியும்

ஐபோன், மற்ற ஸ்மார்ட் போன்கள் மற்றும் தவறான பரப்புரை எண் மூலம் சுட்டு ஆதரவு வீடியோக்கள் 
ஐபாட், ஐபாட், ஐபோன், PSP, பிஎஸ் 3, எக்ஸ்பாக்ஸ், மொபைல் போன், எம்பி 4 பிளேயர்கள், கூகிள் தொலைபேசிகள் வீடியோ மாற்ற உதவும் .

திருத்து வீடியோக்கள், கிளிப் / ஒன்றிணைப்பு / பிளவு கோப்புகளை, வாட்டர் / வசனவரிகள் / ட்ராக்குகளை சேர்க்க முடியும்.

                                                                DOWNLOAD