Thursday 23 October 2014

உங்கள் Pendrive ஐ RAM ஆக மாற்ற வேண்டுமா?

கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் அவற்றின் பயன்பாடுகளை பயன்படுத்த தேவைப்படும் நினைவாற்றலின் அளவை எண்ணி பார்க்கும் போது பகல் கனவாகவே உள்ளது.
இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம். ஆனால் RAMன் விலை அதிகமென்பதால் நாம் பயன்படுத்தும் Pendriveவை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.



பயன்படுத்தும் வழிமுறைகள்:

1. பயன்படுத்தும் Pendriveவில் உள்ள அனைத்து தகவலையும் நீக்கிவிட்டு Pendriveவை கனணியின் USB portல் பொறுத்தவும். (Minimum 2 GB)

2. MY COMPUTER யை Right click செய்து அந்த menuவில் உள்ள PROPERTIES யை click செய்யவும்.


3. அடுத்ததாக தோன்றும் system properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.
4. Setiing என்பதை Click செய்க
5.Performance window வில் advance க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.


6. தோன்றும் அடுத்த window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.



7. Initial Size:1020 ,Maximum size:1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம்.


8. set என்பதை click செய்யவும்.

9. கடைசியாக ok செய்தவுடன் கனணியை restart செய்யவும்

இனி உங்கள் கணணியை WiFi ஆக பாவியுங்கள்

ஆரம்பமாக Start க்கு செல்லுங்கள்.


பின்பு அதில் Search Bar இல் cmd என Type செய்யுங்கள். பின்பு cmd என்ற File ஐ Right Click செய்து Run as Administrator என்பதை அழுத்துங்கள்.

பின்பு வரக்கூடிய Dialoge Box இல் உள்ள Yes என்பதை Click பண்ணுங்கள்.

வரக்கூடிய Command Prompt இல் netsh wlan show drivers என Type செய்து Enter பண்ணுங்கள். பிறகு பின்வருமாறு தோன்றும். அதில் Hosted network supported : என்பது YES என இருக்கின்றதா என உறுதி செய்யுங்கள்.
அடுத்ததாக நீங்கள் கீழே netsh wlan set hostednetwork mode=allow ssid=Hotspotnamekey=password என Type செய்து Enter பண்ணுங்கள். (Hotspotname என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுக்கலாம்.) இப்பொழுது WiFi உருவாக்கப்பட்டுவிட்டது. எங்கிலும் அது Offline இல் தான் உள்ளது.

நீங்கள் WiFi ஐ Start பண்ண netsh wlan start hostednetwork என Type செய்து Enter பண்ணுங்கள். இனி உமது WiFi ஏனைய Mobile களிலோ அல்லது Computer களிலோ காட்டும்.
அதை நிறுத்த netsh wlan stop hostednetwork என Type செய்து Enter பண்ணுங்கள்.
WiFi இன் விபரங்களை அறிய netsh wlan show hostednetwork என Type செய்து Enter பண்ணுங்கள்.

Tuesday 21 October 2014

வேலை பார்க்கும் பெண்களுக்கான சட்டங்கள் என்ன?



மகப்பேறு நல சட்டம், 1961
(மெட்டர்னிட்டி பெனிஃபிட் ஆக்ட் 1961)
ஆகாய விமானம் ஓட்டுவதில் தொடங்கி,
ஆண்களைக் காலில் விழச் செய்கிற
வரை இன்று பெண்களால் எல்லாம் முடியும்.
பெண்கள் இல்லாத துறை என்பதே அரிதாகிக்
கொண்டிருக்கிற காலகட்டம் இது. ஆனாலும்,
வேலை என்று வீட்டை விட்டு வெளியே வரும்
பெண்கள், பணியிடத்துச் சூழலில்
பாதுகாப்பை உணர்கிறார்களா?
இந்திய அரசியல் அமைப்பு சாசனம்,
‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’
என்று கூறினாலும் அதன் 15(3) ஷரத்தின்
கீழ் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான
தனிச்சட்டங்கள் இயற்ற
வழிவகை செய்துள்ளது. அதன்
அடிப்படையிலேயே பல நலச் சட்டங்கள்
இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளன. நம்
நாட்டில் உழைக்கும் மகளிருக்காக இருக்கும்
சட்டங்கள் என்ன என்ன? அவை கொடுக்கும்
பாதுகாப்பு என்ன? என்பது உழைக்கும்
பெண்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
மகப்பேறு நல சட்டம், 1961
(மெட்டர்னிட்டி பெனிஃபிட் ஆக்ட் 1961)
ஒரு பெண்ணுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும்
சிரமத்தையும் ஒரே நேரத்தில் கொடுக்கும்
காலம்தான் அவளது தாய்மைப் பருவம்.
தாய்மையடைந்த நிலையில் வேலைக்குச்
செல்லும் போது அவளுக்கு சட்டம்
கொடுக்கும் பாதுகாப்பு மற்றும் சலுகைகள்
பற்றி மகப்பேறு நல சட்டம் 1961
விளக்குகிறது. தாய்மையடைந்துள்ள
ஒரு பெண் மற்றும் அவள் ஈன்றெடுக்கும்
அந்தப் புது வரவின் ஆரோக்கியத்தைப்
பாதுகாக்கவும் குழந்தைப்பேறுக்கு சில
நாள்கள் முன்பும், பின்பும்
சராசரி பணி செய்ய இயலாத தாய்க்கும்
சேய்க்கும் தேவையான விடுப்புடன் கூடிய
பொருளாதார சலுகை மற்றும் இதர சலுகைகள்
அளிப்பது என்ற நோக்கிலேயே இந்தச் சட்டம்
இயற்றப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் இந்தச் சட்டம் பொருந்தும்?
தனியார் அல்லது அரசுக்குச் சொந்தமான
தொழிற்சாலை, சுரங்கம், தேயிலைத் தோட்டம்
ஆகியவற்றில்
நேரடியாகவோ அல்லது காண்டிராக்டர்
மூலமாகவோ பணி செய்யும் பெண்கள்,
குதிரையேற்றம், சர்க்கஸ் போன்று உடலால்
செய்யும் வித்தைகள் மற்றும் அதை ஒத்த
வித்தைகள், கடை, அங்காடி போன்றவற்றில்
10க்கும் அதிக பெண்கள் - சென்ற 12
மாதங்களில் பணிபுரியும் பட்சத்திலும்,
அரசு, தொழில், வர்த்தகம், விவசாய
ரீதியான பணியில் ஈடுபடுவோருக்கும
2 மாத அறிவிப்பினைத்
தொடர்ந்து அரசாங்கப் பதிவேட்டில்
அறிவித்து இச்சட்டத்தை அவர்களுக்கும்
அமல்படுத்தச் செய்யலாம். இந்தச் சட்டத்தின்
பொருளாதார ரீதியான சலுகைகள்...
பிரசவத்துக்கு முன் 6 வார காலத்துக்கான
சம்பளத்துடன் கூடிய விடுப்பு,
பிரசவத்துக்குப் பின் 6 வார காலத்துக்கான
சம்பளத்துடன் கூடிய விடுப்பு (இந்த 12
வார
விடுப்பினை எப்படி வேண்டுமென்றாலும்
எடுத்துக் கொள்ளலாம்).
நிர்வாகத் தரப்பு இலவச மருத்துவ
பாதுகாப்பு தர இயலாத பட்சத்தில்
குறைந்தது 1,000 ரூபாய்க்கான மருத்துவ
போனஸ். பேறுகாலம், பிரசவம்
அல்லது கருக்கலைப்பின் போது ஏற்படும்
உடல்நலக் குறைவுக்கான சான்றாவணம்
சமர்ப்பிக்கும் பொருட்டு மேலும்
ஒரு மாதத்துக்கான சம்பளத்துடன் கூடிய
விடுப்பு.
கருக்கலைப்பு ஏற்படின் 6 வாரம்
சம்பளத்துடன் கூடிய விடுப்பு. குடும்பக்
கட்டுபாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தால்
2 வாரம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு.
பிரசவத்துக்கு 6 வாரம் முன்பும் அதற்கு முன்
ஒரு மாதமும் ஆக மொத்தம் 10 வாரங்கள்
வரை எளிமையான பணி கோர கருவுற்ற
பெண்ணுக்கு உரிமை உண்டு. அந்த
உரிமை கோரும் நேரத்தில்
கருவுற்றதற்கு ஆதாரமாக மருத்துவச்
சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
பிரசவத்துக்குப் பின் பணியில் சேர்ந்த
பிறகு எப்போதும் கிடைக்கும் பிரேக்
பீரியட் உடன் மேலும் 2 முறை 15 நிமிட
கால அவகாசம் கொண்ட
(குழந்தைக்கு பாலூட்டுவதற்கு)
இடைவெளி கொடுப்பது அவசியம்.
பேறுகாலத்தின் போது பெண்ணின்
பணிமுறையை உடல்நிலைக்கு குந்தகம்
ஏற்படும்படி மாற்றம் செய்யக்கூடாது.
பேறுகாலத்தில் ஒரு பெண்ணை பணி நீக்கம்
செய்யக்கூடாது. அவ்வாறு பணி நீக்கம்
செய்யும் பட்சத்தில் பேறுகால சலுகையைப்
பெற அவர்களுக்கு உரிமை உண்டு.
(ஒருவேளை தண்டனைக்குரிய
குற்றச்செயலுக்காக
வேலையிலிருந்து நீக்கும் பட்சத்தில்
இச்சட்டத்தின் கீழ் சலுகை மறுக்கப்படலாம்).
தாய்மையைப் போற்ற குறிப்பிடும்படியான
ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்
India Vs Nargalesh Meerza
என்ற வழக்கின்
தீர்ப்புக்கு முன் வரை இந்திய விமானப்
பணிப்பெண்ணாக பணிபுரிய அதிகபட்ச
வயது 35 ஆகவும் அல்லது பணியில்
சேர்ந்து 4 வருடங்களுக்குள் திருமணம்
நடைபெறுவது அல்லது முதன் முறையாக
தாய்மை அடைவது இதில் எது முன்னர்
நடைபெறுகிறதோ அதன்படி அப்பெண்கள்
பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுக்
கொண்டிருந் தார்கள். குழந்தை பெற்ற
பிறகு தொடர்ந்து பணி செய்வதோ, அந்தப்
பணியிலிருக்கும் போது குழந்தையைப்
பராமரிப்பதோ அந்தப் பெண்ணின் தனிப்பட்ட
பிரச்னை, அது எந்த விதத்திலும்
நிர்வாகத்தைப் பாதிக்காது என்று இந்த
வழக்கின் தீர்ப்பு வலியுறுத்தி,
தாய்மை அடையும் பணிபுரியும்
பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.
* ஒரு பெண் இச்சட்டத்தின் கீழ் சலுகைகள்
பெற பிரசவத்துக்கு 12 மாதம்
முன்பு குறைந்தபட்சம் 80 நாள்களேனும்
பணி செய்திருக்க வேண்டும். அது
வருகைப்பதிவேட்டில் பதிவாகியிருக்க
வேண்டும்.
‘அசோசியேட் பேங்க் ஆபீசர்ஸ்
அசோசியேஷன் வெர்சஸ் ஸ்டேட் பேங்க் ஆஃப்
இந்தியா’
புகழ் பெற்ற இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம்
உச்ச நீதிமன்றம் சமமான வேலைக்கு சமமான
கூலி என்ற கோட்பாட்டை மீண்டும்
ஒரு முறை நிலைநிறுத்தி உழைக்கும்
மகளிருக்கு எதிரான ஊதிய
குறைபாட்டை நிவர்த்தி செய்ய
வழிவகை செய்தது. இந்தச்
சட்டத்தின்படி ஒரு நிர்வாகத் தரப்பு தகுந்த
பதிவேடுகளை பாராமரிக்காத பட்சத்திலும்,
மேலும் அது சம்பந்தப்பட்ட
தஸ்தாவேஜு களை சமர்ப்பிக்காத பட்சத்திலும்
இந்தச் சட்டத்துக்குப் புறம்பாக ஆண், பெண்
ஊழியர்களை சமமாக நடத்தாமலும், சமமாக
கூலி கொடுக்காமல் இருக்கும் பட்சத்திலும்
சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க
வாய்ப்புள்ளது.
இது டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய
தீர்ப்பு.

Monday 6 October 2014

ATM Online Complaint:

ATM Online Complaint:

மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது. இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.
அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.
உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.

வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.
இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.
அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.
அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.

அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.

அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.

மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .

இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }
"https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html

சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.

நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.

மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.

இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.

எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை...


மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது. இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.
அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.
அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.
உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.
வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.
இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.
அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.
அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.
அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக
http://sh.st/tT9yJ
ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.
அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.
மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .
இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }
"http://sh.st/tT9yJ
சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.
நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.
மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.
இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.
எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை...